Wednesday, July 20, 2016

பள்ளியறையே இல்லாத சிவத்தலம் நாகப்பட்டினம்


அருள்மிகு அணிகொண்ட கோதையம்மை சமேத முல்லைவன நாதர் திருக்கோயில், திருமுல்லைவாசல் - 609 113. நாகப்பட்டினம் மாவட்டம்.

தற்போது சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட இத்தலத்திலிருந்து அரை கி.மீ. தூரத்தில் கடற்கரை அமைந்துள்ளது.

பொதுவாக எல்லா பெரிய சிவத்தலங்களிலும் பள்ளியறை உண்டு. தினமும் அதிகாலை வேளையிலும், இரவு வேளையிலும் பள்ளியறை பூஜை நடப்பது வழக்கம். ஆனால், பள்ளியறையே இல்லாத சிவத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருமுல்லை வாசல் ஆகும். 


அம்பாளுக்கு 
பஞ்சாட்ஷர மந்திரத்தின் பொருள்  குறித்து இங்கு ஸ்வாமி குருவாக வீற்றிருந்து  உபதேசித்தபடியால் இங்கு 
 பள்ளியறை கிடையாது ....

இத்தலத்தின் வாயு திசையில் உள்ள கிணற்றில் கங்கை வாசம் செய்வதாக ஐதீகம். இத்தலம் 1300 வருடங்களுக்கு முன் கிள்ளி வளவனால் கட்டப்பட்டது. இத்தலத்தைப்பற்றி திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.


சீர்காழியிலிருந்து 12 கிலோமீட்டரில் உள்ளது திருமுல்லைவாசல் ......



No comments:

Post a Comment