Monday, July 4, 2016

சனி பிரதோஷத்தன்று தரிசித்த திருக்கோயில்-2 

அன்பர்களே மற்றொரு திருக்கோயில் ஆடுதுறை அருகில் உள்ள  மேலமருத்துவக்குடி என்னும் கிராமத்தில் உள்ளது ....சென்ற  இரு ஆண்டுகளுக்கு முன் திருப்பணி செய்யப்பட்டு பொலிவுடன் விளங்குகிறது ....

ஆனால் சென்ற சனி பிரதோஷத்தன்று 5.30 மணி அளவில் நாங்கள் சென்றிருந்தபோது விளக்கு கூட ஏற்றப்படாமல் இருள் சூழ்ந்து இருந்தது .....அருகில் உள்ளவர் உதவியுடன் கதவை திறந்து மூலவரை தரிசனம் செய்தோம் .....

ஒரே ஒரு பெண்மணியை தவிர திருக்கோயிலில் வேறு யாருமே இல்லை ....

அர்ச்சகர் காலையிலேயே (?) வந்து தான் கடமையை முடித்து சென்று விட்டதாக கூறினார்கள் .....

பின்னர் அருகில் உள்ள அம்மன் ஆலய பூசாரி வந்து விளக்கேற்றி , தரிசனம் செய்ய உதவினார்.
இறைவன் உடைய வேதீஸ்வரர் என்னும் பெயருடன் கம்பீரமாக அழகாக தரிசனம் தருகிறார்..

அன்னை மாதுமை நாயகி ....

அன்பர்களே.....குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பார்கள் ......
நாம் கொண்டாடாவிட்டால் பின் இறைவன் எங்கணம் விரும்பி எழுந்தருள்வான்? 
அருகில் உள்ள மெய்யன்பர்களே ...இதை கவனத்தில் கொள்ளுங்கள் ....

திருக்கோயில் திருப்பணி செய்யப்படுவதை விட முக்கியமானது , அதன் பின் அது பழைய நிலையை அடைந்து விடாமல் போற்றி பாதுகாப்பதேயாகும் ....


No comments:

Post a Comment