Wednesday, July 6, 2016

சுகந்த குந்தளாம்பிகை உடனுறை தளிகேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் பள்ளியக்ரஹாரம், ..தஞ்சை 

தஞ்சை --குடந்தை பிரதான சாலையில் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் பள்ளியக்ரஹாரம் உள்ளது.
சற்று தொலைவிலேயே திருக்கோயில் அமைந்துள்ளது .....மிகவும் சிதிலமடைந்த நிலை..

ஆனால் மிகப்பெரிய கற்றளி ..தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜி அவர்களின் மைத்துனர் 
இத்திருக்கோயிலை வடித்துள்ளார் .....

அவருடைய சிலை மூலவருக்கு நேரெதிரே முக மண்டபத்தில் இருக்கிறது ....
கலையம்சம் மிக்க பிரம்மாண்டமான நந்தி நம் கண்ணையும் கருத்தையும் கொள்ளை கொள்கிறது .
மூலவரின் திருமேனி மீது பாம்பின் உருவம் பொதிந்துள்ளதாக சொல்லிகிறார்கள் ., எனவே இது ராகு கேது தோஷம் நீக்கும் தலமாக அறியப்படுகிறது .....

தற்போது திருப்பணி ஆரம்பிக்கப்பட இருக்கிறது .....
திருக்கோயிலுக்கு நேர் எதிரே உள்ளவர்கள் கோயிலை திறந்து தரிசனம் செய்ய உதவினார்கள் ..






No comments:

Post a Comment