Wednesday, July 13, 2016

திருப்புனவாசல் பழமலைநாதர் திருக்கோயில் , புதுக்கோட்டை 

3 முழமும் ஒரே சுற்று ....30 முழமும்  ஒரே சுற்று.......

அன்பர்களே, தஞ்சை மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் திருக்கோயில் லிங்கங்களை விட இத்தலத்து லிங்கத்தின் ஆவுடையாரே  மிகப்பெரியது ......82.5 அடி சுற்றளவு கொண்டது .......தஞ்சை பெருவுடையாரின் ஆவுடையார் 60 அடி சுற்றளவு .....

எனவே இப்பெருமானுக்கு வஸ்திரம் அணிவிக்கும் போது ஒருவர் பிடித்து கொள்ள ஒருவர் சுற்றி வந்து 
ணிவிப்பார்கள்.  எனவே தான் 3 முழமும் ஒரே சுற்று 30 முழமும்  ஒரே சுற்று என்னும் பழமொழி வழக்கில் தோன்றியது.

இப்பெருமானின் வஸ்திரம் தனிப்பட்ட முறையில் ஆர்டர் கொடுக்கப்பட்டு நெய்து தரப்படுகிறது.
பக்தர்கள் காணிக்கையாக நெய்து தருகின்றனர் ...

இத்திருக்கோயிலின் சிறப்புகள் வார்த்தைகளில் அடங்காதது .....

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் , இத்தலத்தில் வழிபட்டால் உடன் தோஷம் நிவர்த்தி ஆகும்.
இதனால் திருமண தடை , மழலை பாக்கியம் தடைபடுதல் ஆகியவற்றிக்கு இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம். 

முக்கியமாக இத்திருக்கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் பிரசவ ஆஸ்பத்திரியை கிடையாது என்கின்றனர்.
இங்கு கோயில்  கொண்டுள்ள காளியின் அருளால் வீட்டிலேயே சுகப்பிரசவம் ஆகிவிடுவதாக தெரிவிக்கின்றனர்.

வைகாசி விசாகத்தில் போது சூரிய பூஜை நடைபெறும் இத்தலம் தேவார பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களுள் 7 ஆவதாக விளங்குகிறது ....

புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி வந்தடைந்து அங்கிருந்து 42 கிலோ மீட்டரில் திருப்புனவாசல் உள்ளது .
பேருந்து வசதி அடிக்கடி உண்டு.



No comments:

Post a Comment