Sunday, July 3, 2016

சனி பிரதோஷத்தன்று தரிசித்த திருக்கோயில்கள் ...

அன்பர்களே ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும் மிகப்பழமை வாய்ந்த நம் கிராமங்களில் உள்ள அதிகம் அறியப்படாத திருக்கோயில்களை தரிசிப்பது என் வழக்கம் ....

நான் குடந்தையில் இருப்பதால் நேற்று சனி பிரதோஷத்தின் போது ஆடுதுறை அருகில் உள்ள இரு திருக்கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது இறைவன் திருவருளால் .....

இதோ உங்கள் பார்வைக்கு .....அந்த திருக்கோயில்கள்களுள் ஒன்று ....
குடந்தை ----மயிலாடுதுறை மார்க்கத்தில், 
ஆடுதுறை அருகில் உள்ள மஞ்சமல்லி திருத்தலம் ......நெல் வயல்கள் சூழ்ந்த அழகான கிராமம் ...ஆடுதுறையிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ....பேருந்து வசதி அதிகள் இல்லை எனவே சொந்த வாகனங்களில் வருவது சிறந்தது ...

அன்பர்களே ...ஒன்றை சொல்லி ஆக வேண்டும்... இரண்டு கோயில்களிலும் அர்ச்சகர் இல்லை ...பக்தர்களும் இல்லை ....எனவே அர்ச்சகர் வேக வேகமாக பூசைகளை முடித்து விட்டு வேறு கோயிகளுக்கு சென்று விடுகின்றனர்..
மூடியிருந்த கிரில் கதவுகளின் வழியாகத்தான் தரிசனம் செய்தோம் ..அவர்களை சொல்லி புண்ணியமில்லை ...அவர்களுக்கும் வருமானம் வேண்டுமல்லவா?
அற்புதமான திருக்கோயில்....இறைவன் திருநாமம் மந்திரபுரீஸ்வரர் ....அம்பிகை பெரிய நாயகி ...
மூலவர் மிக பிரம்மாண்டமான மூர்த்தி ....மிக்க அழகு ....

அர்ச்சகர் இல்லாததால் ஆலய வரலாறு தெரிந்து கொள்ள முடியவில்லை ....










2 comments:

  1. திருவாவடுதுறை மடத்துக்கோவில் என நினகை்கிறேன்.

    ReplyDelete