Wednesday, July 20, 2016

சம்புடத்தில் வைத்து எடுத்து வரப்பட்ட சதாசிவன்

அன்னை பார்வதி தேவியால் பராசர முனிவர் ஆலோசனையின் பேரில் கைலாயத்திலிருந்து எடுத்து வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமான்...
ஏன்  எதற்காக?

ஒரு சமயம் காரை மாநகர் என்று அழைக்கப்பட்ட காரைக்கால் நகரை மாபெரும் வறட்சி தாக்கப்பபோவதை
தன் குறிப்பால் உணர்ந்த முனிவர்கள் , அங்கு வாழும் மக்களை காப்பாற்ற விழைந்தனர் ......

பார்வதி தேவியை கலந்தாலோசித்தனர் .....
பூலோகம் வர விழைந்த அன்னை உமா தேவி தான் பூசித்து வந்த கைலாச பெருமானை ஒரு சம்புடத்தில் இட்டு 
(தூக்கு சட்டி போன்ற ஒரு பாத்திரம்) எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து தவம் இயற்றி வந்தாள் ...
ஈசனின் கருணையால் ஆபத்து நீங்கியது ......

அன்பர்களே இன்றும் காரைக்கால் மாநகரம் வளம் கொழிக்கும் 
தலை நகரமாக விளங்குவதற்கு இப்பெருமானே காரணம்......

அன்பர்களே....திருநள்ளாறு செல்லும் பக்த கோடிகளே ......காரைக்கால் வந்து காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு நேரெதிரே இருக்கும் இத்திருத்தலத்திற்கு வருகை தாருங்கள்...

காரைக்கால் அம்மையாரோடு ,7 அடி உயர பிரம்மாண்டமான கைலாசநாதர் பேரழகு பெருமானை தரிசனம் செய்யுங்கள்.  

5 சிவஸ்தலங்கள் இங்கு அணி செய்கின்றன ஒரு பாடல் பெற்ற தலம் (*பார்வதீஸ்வரர் திருக்கோயில்)உட்பட
.....

இவை அனைத்துமே நகரத்திற்குள்ளேயே அரை கிலோமீட்டர் சுற்றளவிலேயே அமைந்துள்ளது .....

எனவே திருநள்ளாரோடு  திரும்பி விடாமல் காரைக்கால் வந்து எனவே திருநள்ளாரோடு  திரும்பி விடாமல் காரைக்கால் வந்து இங்கு விளங்கும் பஞ்ச சிவஸ்தலங்களையும் வழிபட்டு ஈசன் அருள் பெறுங்கள்......


இப்பெருமான் இங்கு வருவதற்கு காரணமான இரீசிக முனிவர், குசமா முனிவர் மற்றும் அகத்திய முனிவர் ஆகியோர் தனித்தனியே பிரதிஷ்டை செய்து வணங்கிய திருமேனிகள் இதோ உங்கள் பார்வைக்காக...



1 comment: