Friday, July 1, 2016

சீர்காழியின் சிறப்புமிகு திருக்கோயில்கள் 

சிவநேய செல்வர்களே..!  சீர்காழி தலத்தை அறியாதவர்கள் இருக்க முடியாது ...மிக பிரம்மாண்டமான திருக்கோயில் .....

அதன் அருகிலேயே M G R சிலை என்று கேட்டு செல்லுங்கள் .....அருகிலேயே காண்பதற்கரிய பொக்கிஷமான அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது ......
பல சிறப்பம்சங்கள் பொதிந்துள்ள இந்த திருக்கோயில் மக்களால் இன்னமும் அறியப்படவில்லை ....

உயர்ந்த பணத்துடன் கூடிய மூலவர் .....மயில் வாகனம் இன்றி  அமர்ந்த நிலையில் உள்ள முருகப்பெருமான் .. இருபுறமும் பாம்புகளுடன் குருபகவான் ..மூலவரின் பின்புறம் அர்த்தநாரீஸ்வரர் , வாகனமான நந்தியெம்பெருமானுடன் காணப்படுவது .....போன்ற அரிய சிற்பங்கள் இத்திருக்கோயிலின் சிறப்பம்சங்கள் ...

மேலும் முழுவதும் கற்றளியாக திருப்பணி செய்யப்பட்டு தூய்மையாக பராமரிக்கப்படுகிறது ...

அருகில் உள்ளவர்கள் சாவி வைத்துள்ளார்கள் ...

அன்பர்களே....சீர்காழி செல்பவர்கள் தவறாமல் இத்திருக்கோயிலை தரிசனம் செய்யுங்கள்...
அக்னிபுரீஸ்வரரின் அருளை பெறுங்கள்.....





No comments:

Post a Comment