Friday, July 22, 2016

.பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்களே ......

கவலை வேண்டாம் ......
நீங்கள் வணங்க வேண்டிய திருக்கோயில் 

இடையாற்றுமங்கலம் , மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் , வாளாடி வழி, லால்குடி தாலூகா ,திருச்சி 

உத்திரம் நட்சத்திரகாரர்கள் வணங்க வேண்டிய தலம்...திருமண தடை உள்ளவர்கள் அவசியம் வணங்க வேண்டிய திருக்கோயில் .....
திருமணம் நிச்சயமானவுடன் இங்கு வந்து மாங்கல்ய மகரிஷியிடம் பத்திரிக்கை வைத்து நன்றி செலுத்துகிறார்கள்.

குடும்ப ஒற்றுமைக்காகவும் , கால் வலி நிவர்த்தியாகவும் இங்கு பிரார்த்தனை செய்யலாம் .....

பெற்ற  பிள்ளைகளால் , நிராகரிக்கப்படுகின்ற முதியோர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்து மீண்டும் பிள்ளைகளிடம் ஒன்று சேர்கிறார்கள்....

தவ வலிமை மிக்க மாங்கல்ய மகரிஷி வழிபட்ட தலம் இது.....
மாலைகளை தாங்கி வானில் பறக்கும் அட்சதை தேவதைகள், மாங்கல்ய தேவதைகளுக்கெல்லாம் இவரே குரு....
அகத்தியர், வசிஷ்டர், பைரவர் ஆகியோருக்கு மாங்கல்ய தாரண பூஜையை நடத்தித் தந்தவர் மாங்கல்ய மகரிஷி. 


இன்றும் திருமண பத்திரிக்கைகளில் கையில் மாலை தாங்கி பறக்கும் தேவதைகளை இருபுறமும் அச்சிடும் வழக்கம் உள்ளது.

இன்றும் சூட்சும வடிவில் இவர் மாங்கல்யேஸ்வரரை வணங்கி வருவதாக ஐதீகம் நிலவுகிறது ...
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார்.....

கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ விரும்பும் பெண்கள் அதற்காக இங்கு வழிபடலாம்.

இத்தனை சிறப்பு மிக்க திருக்கோயிலை நாமும் சென்று வழிபட்டு மாங்கல்யேஸ்வரரின் அருளை பெற்று வருவோம்....


No comments:

Post a Comment