Monday, November 2, 2015

இழந்ததை  மீண்டும் பெற அருள் புரியும்   திருத்தலம் 


































திருவாரூர்  மாவட்டம் நன்னிலம்  தாலூகா அச்சுதமங்கலம் என்னும் கிராமத்தில் எழுந்தருளியுள்ள காசி விஸ்வநாதரை  வழிபட நாம் வாழ்வில் இழந்ததை மீண்டும் பெறலாம்.  
இழந்த  பொருள் மட்டுமல்லாது , இழந்த மன அமைதியையும் இங்கு வந்து வழிபட, நாம் மீட்டு கொள்ளலாம் .
 இன்றும் இந்த நம்பிக்கை நிலவுகிறது.

மிகப்பழமை வாய்ந்த இந்த திருகோயில்  புதுப்பிக்கப்பட்டு  நேர்த்தியாக பராமரிக்கப்படுகிறது .

அர்ஜுனன்  தங்கியிருந்து  வழிபட்டமையால் அர்ஜுனன் மங்கலம் என்பதே 
தற்போது மருவி அச்சுதமங்கலம் என்று வழங்குகிறது.

ஆலய தொடர்புக்கு : R. மோகன் 9524348725
இத்திருகோயில்  புகழ் பெற்ற ஸ்ரீ வாஞ்சியம் தலத்திற்கு  அருகாமையில்  
அமைந்துள்ளது .

மேலும் இரு அற்புத   சிவாலயங்கள் இங்கு அமைந்துள்ளன .

1 comment:

  1. God performs the world by His Great Maya.

    ReplyDelete