Monday, August 31, 2015

தெரியுமா உங்களுக்கு?


பெற்ற தாய்க்கு ஓர் கோயில் இருப்பது உலகிலேயே நம் தமிழகத்தில் மட்டும் தான்! ஷாஜஹான் தன் மனைவிக்கென கட்டிய தாஜ்மஹாலை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். அனால் அதற்கு பல ஆண்டுகள் முன்னரே தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் மனைவியும், தன்னை தாய்க்கு தாயாக வளர்த்த தன சிற்றன்னையுமான பஞ்சவன் மாதேவியின் நினைவாக முதலாம் ராஜேந்திர சோழன், நம் தமிழன்,கட்டிய கோயில் ஒன்று கேட்பாரற்று கிடக்கிறது!

இது தமிழர்களாகிய நமக்கு பெருமை சேர்க்ககூடியது அல்ல.

அதுவும் கோயில் நகரமாம் குடந்தை நகரின் மையப்பகுதியில் பட்டீஸ்வரம் அருகில் சோழன் மாளிகை எனப்படும் இடத்தில் தான் இந்த பள்ளிப்படை ஆலயம் உள்ளது.இங்கு தான் ராஜராஜ சோழன் தன வாழ்நாளில்
கடைசி நாட்களை கழித்ததாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.தற்போது இந்த ஆலயத்தை ராமசாமி கோயில் என்று குறிப்பிடுகிறார்கள்.


No comments:

Post a Comment