Sunday, August 30, 2015

நெல்லிக்குப்பம் கைலாசநாதர் திருகோயில் ,  கடலூர் 


சிவநேயசெல்வர்களே, குன்றிலிட்ட விளக்கு போல் பிரகாசிக்க வேண்டிய சில அரிய ஆலயங்கள் இன்று குடத்திலி ட்ட விளக்கு போன்று இருளில் மூழ்கி கிடக்கின்றன. 

வெளிச்சத்திற்கு வர வேண்டிய அப்படிப்பட்ட ஆலயங்களுள் ஒன்றுதான் கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பதிலிருக்கும் அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் ஆலயம். 1400 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டு
பின் சோழ, நாயக்க அரசர்களால் திருப்பணி செய்யப்பட்ட பெருமை உடையது.
இங்கு நவகரகங்கள் ஒரே வரிசையில் இறைவனை நோக்கி அமைந்துப்பது சிறப்பாகும். இங்கு கிடைக்கப்பெற்ற ஜேஷ்டா தேவியின் சிலை இக்கோயிலின் பழமையை பறைசாற்றுகிறது.
இன்று அதன் பெருமையையும் சிறப்பையும் இழந்து மின்கட்டணம் செலுத்தவும் வழியின்றி,
திருப்பணியை எதிர்நோக்கி காத்திருக்கிறது.


No comments:

Post a Comment