Sunday, August 30, 2015

அதிகம் அறியப்படாத அபூர்வ ஆலயங்களின் தொகுப்பு .


1. வல்லமங்கலம் சேதுபுரீஸ்வரர் திருகோயில் 


ன்பர்களே, சிவநேயசெல்வர்களே, உங்களின் சீரிய கவனத்திற்கு,
இப்போது விட்டுவிட்டால் பின் எப்போதும் காணமுடியாது இப்படி ஓர் அரிய சிவாலயத்தை. கஷ்டப்பட்டு வரைந்த எழில்ஓவியத்தை
கண்ணாபின்னவென்று கிழித்துபோட்டது போல் உள்ளது இத்திருகோயிலின் இன்றையநிலை.
அமர்ந்த நிலையில் ஒய்யாரமாக அமைந்துள்ள துவார பாலகர்கள் சிலை. ,
மார்பில் சிவலிங்கத்தை தாங்கிய ஐந்தடி உயரமுள்ள கம்பீரமான
பெருமாள் எனஇத்திருகோயிலின் பெருமைகள் அளவிடற்கரியது.
ஆனால் என்னே பரிதாபம்!!!!!!
பக்தர்கள் வருகை என்பதே கிடையாது மாதத்திற்கு ஓரிரு நாட்களை தவிர. பிரதோஷ வழிபாடும் கிடையாது.
இப்படிப்பட்ட திருகோயில்களை அன்பர்களேதயவுசெய்து, சிதைந்த கோயில்தானே என்று அலட்சியபடுத்தாமல் சென்று தரிசனம் செய்யுங்கள் . இது எனதுதாழ்மையான வேண்டுகோள் .
(குடந்தை நகர் அருகில் உள்ள நாச்சியார் கோயிலுக்கு மிக அருகில் உள்ள வல்லமங்கலம் சேதுபுரீஸ்வரர் திருகோயில்.)

No comments:

Post a Comment