Monday, August 31, 2015

காலச்சக்கரத்தை மாற்றி அமைத்து தடைகளை 
தகர்த்து எரியும் திருகோயில் 

விராலூர் அனைவரத நடேசரின் கம்பீரமான தோற்றம். பட்டவர்த்தி அருகில் மயிலாடுதுறை வட்டம். சுற்றிலும் தேவார பாடல் பெற்ற தலங்கள், சிறப்பு வாய்ந்த பரிகார தலங்கள் சூழ நடுநாயகமாக இத்தலம் உள்ளது. அட்ட வீரட்ட தலம் கொற்கை அருகில் உள்ளது .
இறைவன் அர்ச்சுனன் வாளை ஒளித்து வைத்த திருவாளோளிபுத்தூர்
பஞ்சபாண்டவர்கள் பூசித்த இலுபப்பட்டு, அவர்கள் தங்கள் வாளை சாற்றி வைத்த சாத்தங்குடி போன்ற தலங்களை கூறலாம்.
இங்குள்ள 16 பட்டைகளை கொண்ட லிங்கத்திருமேனிக்கு அபிஷேகம் செய்யப்படும் பால் 5 நிறங்களாக மாறும் அதிசயத்தை காணலாம்.

மிகவும் சிதைவுற்றிருந்த இந்திருகோயில் ஆன்மீக அன்பர்களால் திருப்பணி செய்யப்பட்டு தற்போது மிகவும் நேர்த்தியாக விளங்குகிறது.
மயிலாடுதுறையிலிருந்து பேருந்து வசதி உண்டு .
மயிலாடுதுறை ----- மணல்மேடு மார்க்கம் 

தொடர்புக்கு திரு V.V.குமார்   9943899502
04364-258627




No comments:

Post a Comment