Thursday, September 29, 2016

மகாளய பட்சம் ஏன் அனுஷ்டிக்க வேண்டும் ....?


பிதுர்களின் ஆசீர்வாதம் என்பது வங்கியில் நாம் வைத்திருக்கும் சேமிப்பு கணக்கை போன்றது ...
தக்க சமயத்தில் நமக்கு கைகொடுக்கும் ....ஆபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் .....

அவர்களின் பூத உடல் இல்லை  என்றாலும் அவர்களின் ஆன்மா நம்மை பற்றி சிந்தித்து கொண்டே தான் இருக்கும் 
நம் சந்ததியினர் நம்மை பற்றி சிந்திக்கிறார்களா? என்பது அவர்களின் கவலைகளில் ஒன்று..

சந்ததியினரின் மன நிலை பாதிக்கப்படுவது , ஊனமுற்ற சந்ததியினர் , குடும்பத்தில் அடிக்கடி நிகழும் தற்கொலைகள் , மழலை பாக்கியமின்மை இவற்றிற்கு பிதுர்களின் கருணை இல்லாததே காரண மென்று கூறப்படுகிறது .......அன்பர்களே ...இதுவரை பிதுர் கடமைகளை சரிவர நிறைவேற்றாதவர்கள் கூட,
சில தலங்களுக்கு சென்று அதற்கான பரிகாரம் செய்து வரலாம் .....
 இதனால் அவர்களின் அருள் ஆசி கிடைக்கும் ....
திருவாரூர் மாவட்டம் , கங்களாஞ்சேரி வழியாக , நாகை செல்லும் பாதையில் உள்ளது சனி ப்ரீதி 
தலமான , சனீஸ்வர வாசல் எனப்படும் காரையூர் .....

இங்குள்ளது  சங்கர நாராயணி சமேத சங்கர நாராயணர் திருக்கோயில் .....
இங்கு எழுந்தருளியிருக்கும் சனி பகவான் அனுகிரக மூர்த்தியாக விளங்கி , அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கி அருள் புரிகிறார்......அது மட்டுமில்லாமல் இத்தலம் சிறந்த பிதுர் தோஷ நிவர்த்தி தலமாகவும் ......அருகில் ஓடும் விருத்த கங்கையில் நீராடி இங்கு பிதுர் கடன்களை முடித்து , அவர்களின் பரிபூரண ஆசியை அடையலாம் ......

இதனால்  ஏராளமான நன்மைகளை வாழ்வில் நீங்கள் அடையலாம் ......

சனி கிழமைகளில் விசேஷ யாகங்கள் நடத்தப்படுகிறது ....இதில் கலந்து கொண்டும் பலன் பெறலாம்...
குருக்கள்  அகம் இத்திருக்கோயிலுக்கு செல்லும் வழியிலேயே தான் உள்ளது ......

திருநள்ளாறுக்கும் , திருகொள்ளிக்காட்டிற்கும் நடுநாயக மாக இத்தலம் விளங்குகிறது என்பது குறிப்பிட தக்கது .





No comments:

Post a Comment