Monday, September 26, 2016

மயூரத்தில்  ஒரு  ஐயாறு .....


⇒தன்  பரம பக்தன் ஒருவனுக்காக  பரமன் ஐயாறப்பராக  காட்சி யளித்த தலம் 

தஞ்சையில் வசித்தது வந்த சிவபக்தர்களான தம்பதியர் நாத சர்மா , அனவித்யய்
தினசரி திருவையாறு சென்று வணங்குவதை தன்  வாழ்நாள் கடமையாக கொண்டிருந்தனர்.

⇒இவர்களின் பவித்ரமான  பக்திக்கு இணங்க இறைவன் ,தனக்கு மயூரத்திலேயே கோயில் கொள்ள 
இசைந்து எழுந்தருளியுள்ள திருக்கோயில் தான்  மயிலாடுதுறை ஐயாறப்பர் திருக்கோயில் ஆகும்.

அன்னை  தர்மஸம்வர்த்தினி 

⇒இவர்கள்  லிங்க திருமேனியராக இன்றும் மயூரநாதர் திருக்கோயிலில் கோயில் கொண்டுள்ளனர் ...
⇒ அனவித்யய் எழுந்தருளியுள்ள லிங்க திருமேனிக்கு இன்றும் புடைவை சாற்றப்படும் வழக்கம்  உள்ளது.


தற்போது இத்திருக்கோயில்  திருப்பணி செய்யப்பட்டு மிக நேர்த்தியாக விளங்குகிறது ...

மயிலாடுதுறை  பெரிய கோயிலான மயூரநாதர் கோயில்  அருகிலேயே பிரதான சாலை ஓரமாகவே 
அமைந்துள்ள இத்திருக்கோயில் 3 நிலை ராஜகோபுரத்துடன் விளங்குகிறது .....

கோயில்  நுழைவாயிலில் காணப்படும் கைலாய காட்சி மிக அற்புதம்.

அடியார்கள் தரிசிக்க வேண்டிய அற்புத திருக்கோயில் இது ...


No comments:

Post a Comment