Saturday, September 3, 2016

மழலை  பாக்கியம் அருளும் மகாதேவன் 

அன்பர்களே.....மழலை வரம் அருளும் மகாதேவன் வீற்றிருக்கும் (ஒருவராக அல்ல இருவராக ) திருக்கோயில் குறித்து பதிவு செய்திருந்தேன் .....பல்லவர் சோழர்களால் திருப்பணி செய்யப்பட்டு ,முகலாய அரசர்களால் 
நிர்மூலமாக்கப்பட்ட இத்தலம் தஞ்சை மாவட்டம் , கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் அருகில் சென்னியமங்கலம்  என்னும் கிராமத்தில்  உள்ளது ..இறங்குமிடம் : மாடாகுடி பாலம் 
வலங்கைமான் வழி  

இக்கிராமம் வேதியர்களுக்கு கொடையாக அளிக்கப்பட்ட ஊர் ......வடக்கில் திருமலை ராஜன் ஆறும் , தெற்கில் முடிகொண்டான் ஆறும் ஓடுவது  இத்தலத்தின் சிறப்பு ....
 இங்கு இரு லிங்கத்திருமேனிகள்  கண்டெடுக்கப்பட்டன  சில ஆண்டுகள் முன்பு ...

ஸ்ரீ  அருணாச்சலேஸ்வரர்  ஸ்ரீ சொக்கநாதர் என இப்பெருமான்கள் பெயரிடப்பட்டுள்ளனர் ....
அருகில்  வசித்து  வரும்  அன்பர் திரு சங்கர் இப்பெருமான்களை பூசை செய்து  கவனித்து  வந்தார்..

சென்னையை சேர்ந்த  திருப்பணி செம்மல்  திருமதி  மஹாலக்ஷ்மி சுப்ரமணியன் அவர்களின் பெரும் பங்களிப்புடன் தற்போது , திருக்கோயில்  கட்டி முடிக்கப்பட்டு வரும்  ஐப்பசி  மாதம்  26 ஆம் தேதி 
(11--11--201`6)   வெள்ளிக்கிழமை  காலை  9.00 மணிக்கு மேல்  10.30  மணிக்குள் குடமுழுக்கு நடத்த சான்றோர்களால் உத்தேசிக்கப்பட்டுள்ளது .....

அனைவரும்  திரளாக  கலந்து  கொண்டு  பலனடைய வேண்டுகிறேன் ....

மற்றுமொரு  வேண்டுகோள் .... அன்பர்களே ....இன்னமும்  தரை பணி  நிறைவடையவில்லை .....குடமுழுக்கு 
செலவினங்களும் சேர்ந்து  3,00,000 ரூ  தேவைப்படுகிறது ....

நன்கொடைகள்  மூலமாகத்தான் இத்திருக்கோயில்  திருப்பணி நிறைவேற்றப்பட்டு வருகிறது ...
நீங்கள்  உதவ விரும்பினால் கீழ்கண்ட வங்கி  மூலம் பணம் செலுத்தலாம் .....
பொருள் உதவியாகவும்  அளிக்கலாம் ......அலைபேசி எண்கள்  அளித்துளேன் ...
அன்ன  தானமும்  உண்டு...

SRI  UNNAMULAI AMBIKA SAMETHA SRI ARUNACHALESWARA ALAYA  ARAKKATALAI,
AC NO : 500101010801777, IFSC CODE : CIUB0000022
CITY  UNION BANK , VANLANGAIMAN BRANCH 

Contact No....G. Shankar 
94430 86587 &  94429 29740







No comments:

Post a Comment