Sunday, September 18, 2016

ஞான  மார்க்கத்திற்கான  நல்லதொரு  திருக்கோயில்
↝கனவிலும்  காண முடியாத அற்புத திருக்கோயில
↝மகா பெரியவா  ஆராதித்த மகத்தான தலம் .
↝ஒவ்வொரு  இன்ச்சிலும் மிக சுத்தமாக பராமரிக்கப்படும் ஆலயம்
↝இறை திருமேனிகள் மிக கம்பீரமாக ,தோற்றமளிக்கும் தலம்
↝அங்கங்கு போடப்படாமல் இறை வஸ்திரங்கள் அழகாக அடுக்கப்பட்டிருப்பதை இங்கு மட்டும்ணே காண முடியும்
↝இங்கு அன்னை மீனாட்சி க்கு செய்யப்படும் அலங்காரத்தை போன்று வேறெங்கும் காண முடியாது ..

அன்பர்களே....,  இத்தனைக்கும்  காரணகர்த்தா திரு குமார் அவர்கள் ...
இவர் இத்திருக்கோயிலின் அர்ச்சகரும் , பாதுகாவலரும் ஆவார்...கோயில் எதிரிலேயே இவர் கிரஹம் ..

சரி ......  எந்த திருக்கோயில்?   எங்குள்ளது ?

விடயபுரம் ஸ்ரீ சுந்தரேஸ்வர பெருமான் சமேத மீனாக்ஷி அம்மன்  திருக்கோயில்  தான் அது .....
திருவாரூர்  மாவட்டம், கொரடாச்சேரி வட்டம் , கொரடாச்சேரியிலிருந்து  5 கிலோ மீட்டரில்  , தேவார பாடல் பெற்ற  கடைசியாக கண்டுபிடிக்கப்பட்ட  திருவிடைவாய் என்னும் தலத்திற்கு  மிக அருகில் அமைந்துள்ளது ..

தீர்த்தம்  : பாண்டவர்  ஆறு .....

ஆனால்  அன்பர்களே.....  கிடைத்தற்கரிய  இத்தகைய  அரிய  கலை  களஞ்சியத்தை கண்டு கொள்வோர் யாருமில்லை என்பது  வேதனை ........

கையில்  வெண்ணையை (இத்தகைய திருக்கோயில்கள் )  வைத்து கொண்டு  நாம் நெய்க்கு  (மன அமைதி )அலைகிறோம்....

மணிக்கணக்கில்  வரிசையில்  நின்று  அடித்து பிடித்து கொண்டு  எனோ தானோ வென்று  தரிசனம்  செய்து விட்டு  வருகிறோம் .....

இந்த  திருக்கோயிலுக்கு  வந்து  பாருங்கள்.... பின் நீங்களே  சொல்வீர்கள் ......
அருகிலேயே  அரை கிலோமீட்டரில்  கண் நோய்கள்  தீர்க்கும்  கண் கொடுத்த வணிதம் திருக்கோயிலும் உள்ளது ..

நவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது  இங்கு ...கொலுவும்  உண்டு ...

வரும் நவராத்திரிக்கு மீனாக்ஷிக்கு  அணிவிக்க  வஸ்திரங்கள்  தேவைப்படுகிறது ....மற்றும் விளக்கேற்றும்  எண்ணெய் .....சுண்டலுக்கான பொருட்கள்  தேவை ......

இவற்றை  அளிக்க  விருப்பமுள்ளவர்கள்  திரு குமார் ( 9865706651) அவர்களை  தொடர்பு  கொள்ளலாம் ....

இவர்  ஸ்ரீ  மீனாட்சி  அம்மை  உடனாய  ஸ்ரீ சுந்தரேஸ்வரரின்  அருளை  பெற  உங்கள்  அனைவரையும்  அன்புடன்  அழைக்கிறார் .....


திரு  குமார்
அலைபேசி எண் 9865706651






No comments:

Post a Comment