Friday, September 23, 2016

தீபாவளி  திருத்தலம் .....


காசியை போன்று  தீபாவளி அன்று தரிசிக்க வேண்டிய தலம் திருத்தங்கூர் 

மகாலட்சுமி இத்தலத்தில் தங்கி பூசித்ததால் 'திருத்தங்கூர்'. எனவே இத்தலத்தை தரிசிப்போருக்கு பொருள் சேர்க்கை ஏற்படும்.

நவக்கரகங்கள் அனைத்தும் தனித்தனியாக சிவலிங்க பிரதிஷ்டை செய்த இடம். இந்த லிங்கங்களை தரிசிபோருக்கு க்ரஹ தோஷம் நீங்கும்.

கங்கை தீர்த்தத்தை ஏற்படுத்தி இறைவனை வணங்கிய தலம் .கங்கைக்கு ஒப்பான தீர்த்தம்.
இதனை தரிசிப்போருக்கு காசிக்கு சென்று வந்த பலன் உண்டாகும்

அனைத்திற்கும் மேலாக தீபாவளி அன்று தரிசிக்க வேண்டிய தலம்.

இத்தகைய பெருமைகள் அனைத்தும் திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி மார்க்கத்தில் இருக்கும் திருத்தங்கூர் தலத்திற்கு உண்டு.
புகழ் பெற்ற திருகொள்ளிகாடு , திருநெல்லிகாவல்,கச்சனம்  போன்ற தலங்கள் இத்தலத்தின் அருகிலேயே உள்ளன.
ஆனால் பக்தர்கள் வருகையோ மிகவும் குறைவு.
இந்நிலை மாறவேண்டும் , அன்பர்களே ஆயிரம் திருகோயில்ககளை கட்டுவதை விட , இத்தகைய புராதனமான திருகோயில்களை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

எதிர்வரும் நம் சந்ததியினருக்கு இதுவே நாம் செய்யபோகும் சிறந்த செயல் 


இத்தலம் புகழ் பெற்ற திருக்கொள்ளிக்காடு(பொங்கு சனி ஷேத்திரம் ) செல்லும்  வழியிலேயே உள்ளது ..


No comments:

Post a Comment