Wednesday, August 31, 2016

மகான்கள் வழிபட்ட மகத்தான திருக்கோயில் 

மகான்களாலும் , ரிஷிகளாலும் , மாபெரும் சித்த புருஷர்களாலும் வணங்கப்பெற்ற லிங்கத்திருமேனிகள் நமக்கு 
கிடைக்குமாயின் அதை விட நாம் பெரும்  பாக்கியம் வேறென்ன உள்ளது? 

அன்பர்களே, அப்படி வாராது வந்த மாமணி போல் நமக்கு  , நாம் உய்வதற்கு கிடைத்த பொக்கிஷமாக 
வந்தவர்தான் திருவாரூர் ----மன்னார்குடி பிரதான சாலையில் அமைந்துள்ள கமலாபுரம் என்னும் இடத்தில் 
கோயில் கொண்டருளும் தியான லிங்கேஸ்வர பெருமான் ....

கம்பீரமாக கோயில் கொண்டு நம் மனதை கொள்ளை கொள்கிறார் .....

இப்பெருமானுக்கு  மேற்கூரை வேயப்பட்டுள்ளது ......

அருகில் உள்ள அன்பர்களால் பிரதோஷ பூசையும் நடைபெறுகிறது ......

விரைவில் அவன் அருளாலே அவன் திருக்கோயில் அமைய வேண்டும் .....
என்பதே ஆன்மீக அன்பர்களின் எதிர்ப்பார்ப்பு ....

சிவாய நம .....


No comments:

Post a Comment