Wednesday, August 10, 2016

நித்யகல்யாணி உடனுறை திரு நித்தீஸ்வரர் திருக்கோயில் காரைக்கால் .......

காரைக்கால் செல்பவர்கள் தவறாமல் வணங்க வேண்டிய ஒரு திருக்கோயில் இது.
இத்திருக்கோயில் ஏராளமான சிறப்பு அம்சங்களை கொண்டது .....
 முக்கியமாக திருமண தடை நீக்கும் சிறப்பு திருத்தலம் .....
இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் நடந்த தலம் என்பதால் விரைந்து திருமணம் நடக்க வேண்டுபவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம் ......

பொருள் வரவு, தான லாபத்திற்கு இத்தலம் மிகவும் சிறப்பு வாய்ந்த பரிகார தலமாகும் ...

இத்தலத்தின் விசேஷ மூர்த்தியாய் விளங்கும் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவ மூர்த்தி தன் மனைவியோடு காட்சியளிக்கிறார் ... தேய் பிறை அஷ்டமி நாளில் இங்கு விசேஷ மஹா யாகம் நடத்தப்படுகிறது .....அன்று யாகத்தில் கலந்து கொண்டு  அன்பர்கள்  பலன் பெறலாம் ......

இங்கு உறையும் பைரவ மூர்த்தியை வணங்குவதால் , வறுமை நிலை நீங்கி , வாழ்வில்  வளம் பெருகும் என்பது நிதர்சனமான உண்மை .......

இத்திருக்கோயில் பிரதான சாலையிலேயே சுந்தர மூர்த்தி விநாயகர் திருக்கோயில் எதிரில் உள்ள சந்தின் கடைசியில்  அமைந்துள்ளது .....

பலரும் இத்திருக்கோயிலின் சாநித்தியத்தை உணராமல் உள்ளனர் .....எனவே அன்பர்களே காரைக்கால் செல்லும் போது , கருவறையில் கம்பீரமாக கொலுவீற்றிருக்கும் நித்ய கல்யாணி உடனுறை நித்தீஸ்வர பெருமானை  தரிசனம் செய்ய மறக்காதீர்கள் .....



No comments:

Post a Comment