Saturday, August 13, 2016

விடம் தீண்டாபதி , கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ள தலம் தான் அது ... இத்தலத்தின் பெருமையை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் .......ஆதிசேஷன் வழிபட்டு இத்தலத்தின் எல்லை வரை யாரையும் தீண்டமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்துள்ளமையால் இன்று வரை யாரும் இத்தலத்தில் பாம்பு தீண்டி இறந்ததில்லையாம் ....

பஞ்ச பாண்டவர்கள் , சப்த முனிவர்கள் , அஷ்டதிக் பாலகர்கள் , மஹா விஷ்ணு முதலான தேவாதி தேவர்கள் 
சிபி சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் , டிண்டி , முண்டி  எனப்படும் துவார பாலகர்கள் போன்ற எண்ணற்றவர்களால் இறைவன் வழிபட பட்டிருக்கிறார் ......

63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் பிறந்த தலம் இதுவே....
முருகப்பெருமான் பிரம்மனை சிறைபிடித்த குற்றத்திற்காக இங்கு தீர்த்தம் உருவாக்கி  வெள்வேல மரத்தடியில் 
தவம் புரிந்து வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றார் .....
இதுவே இத்தலத்தின் தல விருட்ஷம் 

வேலாயுத தீர்த்தம் எனப்படும் இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் அனைத்து விதமான தோல் நோய்களும் நீங்க பெறுவர் ....

இதைவிட வேறென்ன சிறப்பு வேண்டும்..?

அகத்தியருக்கு திருமண காட்சி நல்கிய இடம் ......
தேவார மூவரால் பாடல் பெற்ற  தலம் ......

எல்லாவற்றிக்கும் மேலாக உலக புகழ் பெற்ற கருமாரி அம்மன் ஆலயம் அமைந்துள்ள தலம் ..

அன்பர்களே .......என் வேண்டுகோள் என்னவெனில் இத்தலத்தை சுற்றியிருக்கும் அஷ்டதிக் பாலகர்கள் வழிபட்ட அஷ்ட லிங்கங்களை அன்பர்கள் சென்று வழிபட வேண்டும் என்பதே.....

திருவேற்காடு சென்று தவறாமல் அனைத்து திருக்கோயில்களையும் வழிபட்டு இறையருள் பெற்று வாருங்கள்....





No comments:

Post a Comment