Saturday, August 20, 2016

பாரிவாக்கம் பெருமானுக்கு வழி பிறக்குமா? 

நல்லதோர் வீணை செய்தே அதை நலம்கெட புழுதியில் எறிவதுண்டோ ?

இப்படித்தான் தோன்றியது பெருமான் புதர் மண்டிய  ம(மா)க்கள்  இயற்கை உபாதைகள் கழிக்கும் ஒரு இடத்தில் நான் பார்த்தபோது !!!!!

எண்ணில் பாவிகள் எந்தை ஈசனின் நண்ணல் அறியாமல் நழுவுகின்றார்களே !!!!!

இடம்: பாரிவாக்கம் ....திருவள்ளூர் மாவட்டம் ...பட்டாபிராம் ரயில் நிலையத்திலிருந்து பூந்தமல்லி செல்லும் வழியில் உள்ள ஓர் சிற்றூர்  பாரிவாக்கம் ....
இங்கு பிரதான சாலையின் ஓரம்  ஒரு டெலிபோன்  ஆண்டெனா பின்புறம் உள்ள வெட்ட வெளியில் வீற்றிருக்கிறார் இவர்....

இங்கு  ஒரு சிவஸ்தலமும் , மற்றும் சிறிது சிறிதாக நிறைய ஆலயங்களும் உள்ளன.....
ஆனால் இப்பெருமானை கவனிப்பதற்கு தான் ஆள் இல்லை .....

சென்னையை சேர்ந்த கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபையினர் மூலம் இவர் தன்னை வெளிப்படுத்தி கொண்டார்....

பல காலமாக இவர் நிலை இப்படித்தான் உள்ளது ....
பெருமான் நல்ல உயர்ந்த திருமேனியராய் சேவை சாதிக்கிறார்.

அருகில் உள்ள திருக்கோயில்களில் இவர் பிரதிஷ்டை செய்து வழிபாட்டிற்கு கொண்டு வர ஏன் நல்ல உள்ளங்கள் முயற்சி செய்ய கூடாது ?



No comments:

Post a Comment