Sunday, August 21, 2016

வேதங்கள் வழிபட்ட வேத நாயகன்.....
மறைநூல் வல்லோர்கள்  போற்றும் திருமறைச்சேரி (மாறச்சேரி )

வேதங்கள் மட்டுமல்ல தேவாதி தேவர்கள்  வழிபட்ட தலம் .... குறிப்பாக சூரியன் வணங்கி பேரு பெற்ற தலம் ...
ராகு வணங்கிய தலம்  என்று ஏராளமான பெருமைகளை உடைய இத்தலம் இருக்குமிடம் ......நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள  மணலி என்னும் இடத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமறைச்சேரி என்னும் கிராமமாகும் ....
மணலியிலிருந்து ஆட்டோ வசதி உண்டு.....

வேத நாயகன், வேதியர் நாயகன் நாகநாதன் என்னும் திருப்பெயருடன் எழுந்தருளியுள்ளான் ...
அன்னை சுந்தர நாயகி ...பெயருக்கு ஏற்றாற்போல் கொள்ளை அழகு .......மனதை கொள்ளை கொள்ளும் அழகு ..

ஜாதக ரீதியாக சூரியன் பலம் குன்றி இருப்பவர்கள் இங்கு வந்து தோஷ பரிகாரம் செய்து  கொள்ளலாம் ....அது மட்டுமல்ல நாக தோஷம் நீக்கும் சிறந்த பரிகார தலமும் இதுவாகும்....
ஆனால் இத்திருக்கோயிலின் இன்றைய நிலை கண்ணில் நீரை வரவழைப்பதாக உள்ளது .....
இந்நிலை கண்டு பொறுக்காத கிராம மக்கள் , ஆன்மீக அன்பர்கள் இத்திருக்கோயிலை ஏற்பாடு பட்டாவது 
புனரைமைக்க முயற்சித்து வருகின்றனர் .....பாலஸ்தாபனம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இத்திருக்கோயிலை பற்றி விரிவாக சக்தி விகடன் பத்திரிகையிலும் வந்துள்ளது ....

பெறற்கரிய பொக்கிஷமான இத்திருக்கோயிலை நீங்கள் வந்து வணங்க வேண்டாமா? 

திருப்பணியில் உங்கள் பங்கும் இருக்க வேண்டாமா?

இத்திருக்கோயிலை நீங்கள் தரிசிக்க விரும்பினால் , திருப்பணியில் பங்கு பெற விரும்பினால் கீழ் கண்ட அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் ..
7708240152 & 9840063124






No comments:

Post a Comment