Thursday, August 18, 2016

காசிக்கு வீசம் அதிகமான கங்கை வராக நதீஸ்வ்ரர் திருக்கோயில் , திருக்காஞ்சி , புதுச்சேரி 

அன்பர்களே, வேத விற்பன்னரான அந்தணர் ஒருவர் தன் தந்தையின் அஸ்தியினை கரைப்பதற்காக சீடன் ஒருவனுடன் காசியை நோக்கி பயணப்பட்டார் .....வழியில் இத்தலத்தை அடைந்தபோது , சீடனிடம் அஸ்தி அடங்கிய கலசத்தை கொடுத்து விட்டு நித்யானுஷ்டானங்களை அனுஷ்டிக்க சென்றார் ...

கலசத்தினுள் என்ன உள்ளது என்று அறிந்து கொள்ள முற்பட்ட சீடன் அதனை திறந்து பார்க்க கலசத்தில் பூக்கள் இருப்பதை பார்த்தான்....

பூக்களை எடுத்துக்கொண்டு  ஏன் அவ்வளவு தூரம் பயணிக்கிறார் குருநாதர் ? அதை அவரிடமே கேட்க அதிர்ச்சியடைந்த அவர் கலசத்தை திறந்து பார்த்தார்....பூக்களே நிரம்பியிருந்தன ....

அதிசயித்த அவர் இத்திருத்தலத்தின் பெருமையை உணர்ந்து அங்கேயே தன் தந்தையின் கடன்களை முடித்து கொண்டு திரும்பினர்....

வரலாற்று பெருமையும் , புராதன சிறப்பும் ஒருங்கே வாய்ந்த இத்தகைய அரிய தலம் தான் , புதுச்சேரி மாநிலத்தின் புகழ் மிக்க தலங்களுள் ஒன்றான கங்கை வராக நதீஸ்வரர் திருக்கோயில் ஆகும்.....

மூலவர் மிகப்பெரிய 16 பட்டைகள் கொண்ட ஷோடச லிங்கம் ஆகும்.....

பல்வேறு காலா கட்டங்களில் பல்வேறு மன்னர்களால் திருப்பணி  செய்யப்பட்ட இத்திருக்கோயில் காலமாற்றங்களினால் சீர்குலைந்தது .....

தற்போது திருப்பணி நிறைவேற்றப்பட்டு பொலிவுடன் விளங்குகிறது இத்திருக்கோயில் ....

நீத்தார் கடன் புரிவதற்கு காசிக்கு நிகரான ஒப்பற்ற தலமாகும் திருக்காஞ்சி ......
புதுச்சேரியிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்காஞ்சி 
கொடுத்து வைத்தவர்கள் தரிசனம் செய்ய தயாராகுங்கள் ......





No comments:

Post a Comment