Thursday, August 18, 2016

.குடமுழுக்கில் கலந்துகொள்ள திரளாக வாருங்கள் அன்பர்களே....

அரிய சக்தி வாய்ந்த அற்புத திருக்கோயில் ....


1. மண்ணியாற்றங்கரையில் சுயம்புவாய் வீற்றிருக்கும் பெருமான் .
2. பைரவர் ஆராதனை (தேய்பிறை அஷ்டமி ) இங்கு தான் முதன் முதலில் தோன்றியது ...
3. அன்னை பார்வதி மானுட பிறவி எடுத்து இறைவனை தேடி அலைந்த தலம்  இது...
அப்படி தேடும்போது பொன் நகைகளை அடையாளத்திற்காக விட்டு சென்று பின் அதனை பின்பற்றி போனதால் இத்தலம் பொன்பற்றி மருவி பொன்பேத்தி என்று அழைக்கப்படுகிறது இன்று.

4. புகழ் பெற்ற தேன்  உறிஞ்சும் விநாயகர் எழுந்தருளி அருள்பாலிக்கும் தேவார பாடல் பெற்ற திருபுறம்புயம் திருத்தலத்திற்கு வெகு அருகாமையில் 1 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது பொன்பேத்தி ஸ்ரீ அகிலாடேஸ்வரி சமேத பவானீஸ்வர ஸ்வாமி திருக்கோயில் ...

5. ஸ்வர்ண ஆரண்யம் , ஸ்வர்ண பூமி , ஸ்வர்ண காடு  என்றெல்லாம் சிறப்பு பெயரால் அழைக்கப்படும் இடம்..
பிதுர் தர்ப்பணம் செய்ய காசிக்கு இணையான தலம் இது ....

6. இங்கு அஷ்டமி அன்று பைரவ தரிசனம் செய்ய நம்மை சூழ்ந்திருக்கும்  அனைத்து ஆபத்துகளும் நீங்கும் ....
இவரிடம் சமர்ப்பித்து அன்பர்கள் பொன் வெள்ளி அல்லது தாமிரத்தினால் ஆன நாய்க்காசுகளை கயிற்றில் கோர்த்து கையிலோ இடுப்பிலோ ஆண் , பெண் இருபாலாரும் அணிந்து கொள்ள, மகத்தான காப்பு சக்தியாக விளங்கி காப்பாற்றும் ....

இத்தலத்தை பற்றியும் அன்பர் திரு குருமூர்த்தி அவர்களை  பற்றியும் அன்பர்களே ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன் ...
அத்தகைய கிடைத்தற்கரிய  இந்த திருக்கோயிலை இவர்  கிராம மக்கள் மற்றும் திருப்பணி செம்மல் சென்னை திரு மஹாலக்ஷ்மி சுப்ரமணியன் அவர்களின் பேருதவியோடு செப்பனிட்டு வரும் ஆவணி திங்கள் 19 ஆம் நாள் அதாவது 4/09/2016 ஞாயிறு அன்று மஹா  கும்பாபிஷேகம் நடத்த உள்ளார் ....

அன்பர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்... மற்றும் குடமுழுக்கு மற்றும் எஞ்சிய திருப்பணிகளை முடிக்க 4 லட்சம் வரை உதவி தேவைப்படுகிறது ,,,,,,

அன்பர்கள்  நன்கொடை வரவேற்கப்படுகிறது .....

தொடர்பு எண்கள் : 97900 76726, 9585152811
வழித்தடம் : குடந்தை ---திருப்புறம்பியம் பேருந்து எண்  6,18,65,69







No comments:

Post a Comment