Thursday, October 20, 2016

நீங்கள்  விரும்பும் நபரிடமிருந்து அன்பு ,பாசம் , பரிவு உங்களுக்கு கிடைக்கவில்லையா ?  

நிச்சயம் கிட்டும் ....நீங்கள் இத்தல இறைவனை வழிபட்டால் .........

அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோயில், கொருக்கை , நாகப்பட்டினம் மாவட்டம்.

அன்பு, பிரியம், நேசம், விருப்பம், மற்றும் பாசத்தால் ஏங்குபவர்கள் இத்தல மூர்த்தியான காமதகன மூர்த்தியை வழிபட்டால் தாங்கள் விருப்பப்படும் நபரிடம் அன்பு, பிரியம், நேசம், விருப்பம், மற்றும் பாசம் கிடைக்கும். இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் வீரட்டேசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும் 

அத்துடன் உடல் பலம் பெறும்.நோய் நொடி விலகும். தியான பலமும், மனோபலமும் கிடைக்கும் . மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி , உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

திருமண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் வழிபடலாம்.


மயிலாடுதுறையிலிருந்து 8 கிலோமீட்டரில் இத்தலம் உள்ளது ....

பேருந்து வசதி உண்டு ....


No comments:

Post a Comment