Wednesday, October 26, 2016

எல்லாமே இங்கு சதுரம் 
காஞ்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீ பெரும்புதூர் அருகிலுள்ள 'சோமங்கல சோமநாதர் கோவில்.' இங்குள்ள நடராஜர் எங்குமில்லாத சதுர தாண்டவ கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

இக்கோவிலும் கோவிலைச் சுற்றி வேலி போன்று 12 எல்லைக் கோவில்களுடன் சரியான சதுரஅமைப்பில் சதுர்வேதியாக அமைந்துள்ளது.
எங்குமே காண இயலாததாகும்.

இதனாலேயே இக்கோவில் ' சதுர்வேதி ' என்றும் ' சதுர தாண்டவ ஆலயம் ' என்றும்
கூறப்படுகிறது. 

இக்கோவிலின் தலவிருட்சம் சரக்கொன்றை மரம்.


சென்னையை  சுற்றியுள்ள நவகிரஹ திருக்கோயில்களில் முதன்மையானதும் , சந்திரன் வழிபட்ட தலமாகவும் விளங்குகிறது .......சோமன் (சந்திரன்)  வழிபட்டதால் சோமநாதர் என இறைவன் அழைக்கப்படுகிறார்...


திங்கட்கிழமைகளில் வழிபட மன கிலேசங்கள் , மன குழப்பங்கள் நீங்கி  மனம் புத்துயிர் பெறும் .....
சென்று வணங்கி வாருங்கள்...மனம் லேசானதை உணர்வீர்கள் ......



No comments:

Post a Comment