Friday, October 28, 2016

மனம் நிறைவான வாழ்க்கைக்கு மண்ணிப்பள்ளம் ஆதிவைத்தியநாதர் தரிசனம் 

முகநூல் அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நாள் வாழ்த்துக்கள் .......
இன்று பிரதோஷம் .....எனவே தவறாமல் கோவிலுக்கு சென்று சிவ தரிசனம் செய்யுங்கள்.

இந்த பிரதோஷ தினத்தில் பழமையும் புராதன பெருமையும் ஒருங்கே அமைந்த 
மண்ணிப்பள்ளம் ஆதி வைத்தியநாதர் திருகோயில் தரிசனம் செய்வோம் .....

புள்(சடாயு பறவை ) இருக்கு (ரிக் வேதம் ) வழிபட்ட புள்ளிருக்கு வேளூர் எனப்படும் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அறிமுகம் தேவையில்லை ....அன்பர்களே... ஆனால் இங்கு சுற்றிலும் அமைந்துள்ள பஞ்ச வைத்யநாத தலங்களை ஒரே நாளில் வழிபட , நம் வினை பயன்கள் தொலைந்து , வியாதிகள் தீர்ந்து , நன்மை மிக விளையும் ..
மயிலாடுதுறை வட்டம், சீர்காழி அருகே உள்ள இந்த தலம் பஞ்ச வைத்யநாத தலங்களில் இத்தலம்  முதன்மையாக போற்றப்படுகிறது.

மற்ற தலங்கள் : ராதா நல்லூர் , பாண்டூர்,ஐவ நல்லூர் , வைத்தீஸ்வரன் கோயில் , தலங்களாகும் .

இந்த ஐந்து தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பது சிறப்பு. திருக்கோயில் அன்பர் ஒருவரது சீரிய முயற்சியால் சிதைவிலிருந்து மீண்டு புத்துயிர் பெற்று அற்புதமாக திகழ்கிறது ......

கருவறையில் ஆதி வைத்தியநாதர் மிகப்பெரிய திருமேனி கொண்டு அற்புதமாக காட்சி யளிக்கிறார் .

இத்தலத்திற்கு அருகிலேயே கொண்டல் முருகப்பெருமான் ஆலயம், திருகுரக்குக்கா ,வாளொளிபுத்தூர் திருக்கோயில் போன்ற அரிய திருத்தலங்கள்  அமமைந்துள்ளன ...

No comments:

Post a Comment