Wednesday, November 2, 2016

தேனீக்களின் ரீங்கார இசை இனி கேட்குமா ?  அன்பர்களே.....

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், கொட்டாரம் அஞ்சல்- 609 603 நெடுங்காடு வழி, நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஐராவதம் தன் தந்தத்தால் மேகத்தை நோக்கி வணங்கி கங்கையை வரவழைத்து பூஜை செய்ததாக ஐதீகம்.....
சுபர் மகரிஷி, திருக்கோயில் சாற்றி விட்டதால் , தேனீ வடிவத்தில் வந்து வழிபட்ட தலம் இது .....இவர் வழிபட்ட பெரிய லிங்க திருமேனி மேற்கு நோக்கிய தனி சந்நிதியாக அமைந்துள்ளது ......

அர்த்தமண்டபத்தில் பல்லாண்டுகளாக தேனீக்கள் கட்டிய பழமையான தேனடை உள்ளது. இறைவன் சன்னதியில் தேனீக்கள் ரீங்கார ஓசை செய்வதை இப்போதும் கேட்கலாம்.....

ஆனால் இதெல்லாம் முன்னொரு காலத்தில் என்று கூறும்படி ஆகிவிட்டது ........
திருப்பணி செய்யும்போது இத்தேனடை கலைக்கப்பட்டு விட்டது ...
பல்லாண்டு காலமாக இருந்த இத்தேனடை தேனை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் வழக்கம் இங்கு இருந்தது ....மறுபடியும் தேனடை இதே இடத்தில் அமைக்கப்பட்டு விடுமாம் ....

தற்போது இத்தேனடை திருப்பணி என்ற பெயரில் கலைக்கப்பட்டு விட்டது , அதை காண வேண்டும் என்று ஆவலோடு சென்ற எனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது ....

திரும்பவும் தேனீக்கள் வருமா? தேனடை அமைக்கப்படுமா ? காதில் தேன் மாறி பொழியும் 
அந்த செய்திக்காக காத்திருக்கிறேன் ...


கொட்டாரம் நெடுங்காடு வழியாக குடந்தை காரைக்கால் மார்க்கத்தில் கொட்டாரம் கூட்டு ரோடிலிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது 



No comments:

Post a Comment