Thursday, November 24, 2016

பட்ட துயர் யாவும் பகலவனை கண்ட பனி போல் நீங்கும் பட்டமங்கலம் அபிமுகேஸ்வரர் அருளால் ....

சிக்கலில் வேல் வாங்கி சூரபத்மனை வென்ற முருகப்பெருமான் , தன ப்ரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக 9 இடங்களில் சிவ லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். 
அகர கடம்பனூர் , இளம் கடம்பனூர் , கடம்ப வாழ்க்கை ஆழி கடம்பனூர் ,என்பன அவற்றுள் சில .....
இத்திருத்தலங்கள் அனைத்தும் நாகை மாவட்டம் கீவளூர் அருகில் அமைந்துள்ளது ....

இறுதியாக பட்டமங்கம் வந்தார் .....

இங்கு மேற்கு நோக்கிய ஆனந்தவல்லி சமேத அபிமுகேஸ்வர பெருமானை இறுதியாக வணங்கி தோஷம் முழுதும் நீங்கப்பெற்றார் ...

முருகப்பெருமானின் தோஷத்தை நீக்கி அருளிய பெருமானுக்கு நம் பிரச்சனைகளை களைவதா கடினம்?

அன்பர்களே......  இப்பெருமானை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன ?

தெரிந்தோ தெரியாமலோ நம் முற்பிறவிகளில் , இப்பிறவியிலும் செய்துள்ள பாவ செயல்கள் அடியோடு அகலும்...
செல்வ செழிப்பு ஏற்படும் ...
நாட்பட்ட நோய்கள்  நீங்கும் ....
இன்னும் எவ்வளவோ நன்மைகள் அடையலாம் .....

சிதிலமடைந்த இந்த திருக்கோயிலை கிராம மக்கள் பெரு முயற்சியோடு சீரமைக்க முயற்சித்து வருகிறார்கள் 
அன்பர்களே..... மிகவும் தூர்ந்து விட்ட திருக்கோயில் குளத்தை தங்கள் சொந்த முயற்சியிலேயே , மாற்று இடத்தில் ,கோயிலுக்கு நேரெதிரே அமைந்துள்ளார்கள் ....தற்போது இத்திருக்குளம் இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது ......

இத்திருப்பணியில் பங்கு பெற , பட்டமங்கலம் கிராம மக்கள் உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறார்கள் ...   சரி .....சிக்கல் திருகோயிலோடு நெருங்கிய தொடர்புடைய இத்திருக்கோயில் எங்குள்ளது ?
இருப்பிடம் :
சிக்கல் அருகே கீவளூர் திருத்தலத்திலிருந்து , தேவூர் செல்லும் வழியில் 2 கிலோ மீட்டரில் பட்டமங்கலம் என்னும் இந்த கிராமம் உள்ளது ....இங்கு புராதனமான காசி விஸ்வநாதர் கோயிலும் உள்ளது ....

அன்பர்களே.....சென்று வழிபடுங்கள் , திருப்பணியில் பங்கு பெறுங்கள் ......அபிமுகேஸ்வர பெருமானின் அருளை பெற்று வாருங்கள் .....

தொடர்புக்கு :

பாவா என்கின்ற திரு P .K . ஜெயபால் நாயுடு 

அலைபேசி எண் : 9786582126





No comments:

Post a Comment