Tuesday, November 8, 2016

வாழ்வில் வளம் சேர்க்கும் ஆலயம் 
உருக்குலைந்த உமையொருபாகன் திருக்கோயில்

வருமானத்திற்கு வழியில்லாத ஆலயங்கள்  என்றால் கண்டுகொள்ளாமல் விடப்படுவதுதான் அறநிலையத்துறையின் அலட்சிய மனோபாவமா?

அன்பர்களே  ....கைலாயத்தில் மட்டுமே வளரக்கூடிய அறிய மூலிகையான சிவ கரந்தை என்னும் செடி மண்ணில் இங்கு மட்டுமே வளர்கிறது .....

சிவராத்திரியன்று மூன்றாம் கால பூசையின் போது இது இறைவனுக்கு சாற்றப்படுகிறது ....
நாக தோஷம் நீக்கும் சுந்தர நாயகி சமேத நாகநாத ஸ்வாமியை, சிதிலமடைந்த திருக்கோயிலாக இருந்தாலும் , உள்ளூர் அன்பர்களும் அடியார் பெருமக்களும் பெருமளவில் வழிபடுகின்றனர் ....

ஒருகாலத்தில் வேதம் ஓதும் அந்தணர்கள் நிறைந்த திருமறைச்சேரி (தற்போது மாறச்சேரி ) என்று அழைக்கப்படும் இந்த சிற்றூர் நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம் , திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் மணலி  என்னும் இடத்திற்கு அருகில் இத்திருக்கோயில்  அமைந்துள்ளது ....

கிடைத்தற்கரிய இத்திருக்கோயில் மிக சிறந்த ஒரு பரிகார தலமாகும் ...... வாழ்வில் வளம் சேர்க்கும் திருக்கோயிலாகும் ....
கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது போன்று , அரிய இத்திருக்கோயில்களை
நாம் அறியாமல் விட்டு விடுகிறோம் .....

தற்போது பாலஸ்தாபனம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகளை துவக்க அன்பர்கள் சித்தமாய் உள்ளனர்

எனவே அடியார்களும்,சிவ பக்தர்களும், திருப்பணி உபயதாரர்களும் முன்வந்தது    ஆலய திருப்பணிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு:
*ப.முத்துக்குமரன*்+91 9840063124
*ச.வேதையன்*+91 7708240152

.குறிப்பு : இத்திருக்கோயிலை பற்றி விரிவாக சக்தி விகடன் நாளிதழ் வெளியிட்டுள்ளது 



No comments:

Post a Comment