Tuesday, November 15, 2016

அறியபடாத அபூர்வ ஆலயம்--செங்குன்றம் (சிங்கபெருமாள் கோயில்)ஏரிக்கரை ஏகபந்தீஸ்வரர் திருகோயில் .
பக்தன் ஒருவரை பலகாலம் உசுப்பி தனக்கு கோயில் கட்டி கொண்ட கருணையாளன் ...

சிங்கபெருமாள் கோயில் பிரதான  சாலையிலிருந்து சுமார் அரை km தூரத்தில் உள்ளது இத்தலம்.மிகவும் சக்தி வாய்ந்தது.
இங்கு அவர் குடி கொண்டதே மிகவும் சுவாரஸ்யமான விஷயம் ....
லோகநாதன் என்பவர் செங்குன்றத்தில்(சிங்கப்பெருமாள் கோயில் ) வசித்து வந்த ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் .. பலகாலமாக பூமியில் புதைந்திருந்த லிங்க திருமேனியை லோக நாதன் தனது சிறு வயதில் வணங்கி வந்துள்ளார் .பின்னர் வேலை நிமித்தமாக பல இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அவர் ஏறக்குறைய ஏகபந்தீஸ்வரரை மறந்தே போனார் .ஆனால் இறைவன் அவரை விடவில்லை ..
தனது திருவிளையாடலை துவக்கினார் 

ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல சுமார் 6 மாத காலம் தூங்கவிடாமல் 
உசுப்பி உசுப்பி இறைவன் தனக்கு ஒரு திருகோயில் அமைத்து கொண்டான்.
 பலகாலம் பூமியில் புதைந்திருந்த லிங்கத்திருமேனியை லோகநாதன் வாத்தியார் மற்றும் சிவனேய செல்வர்கள் பலரும், முருகாஸ்ரமம் சிவத்திரு சாந்தானந்த ஸ்வாமிகள் அவைகளின் பெருமுயற்சி மற்றும் பொருளுதவியோடு அற்புதமான் திருகோயிலை அமைந்துள்ளனர்.

இன்று கருவறையில் கம்பீரமாக ஆரோகணித்துள்ளார் ஏரிக்கரை ஏகபந்தீஸ்வரர்.பார்க்க பார்க்க திகட்டாத திருமேனி.


No comments:

Post a Comment