Saturday, November 19, 2016

வேற்காடு மேவிய வேத நாயகன் 

திருவேற்காடு கருமாரி அம்மன்  திருக்கோயிலை  அறியாதவர்கள் இருக்க முடியாது. 
இங்குள்ள தேவார பாடல் பெற்ற வேதபுரீஸ்வரர் திருக்கோயில் அகத்தியருக்கு திருமண காட்சி கொடுத்த தலமாகும் ....

திருவேற்காட்டை சுற்றிலும் எட்டு திக்கிலும் இந்திரன் முதலான அஷ்ட திக் பாலகர்கள் எட்டு லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வணங்கியுள்ளார்கள்.

இவை திருவேற்காட்டை சுற்றிலும் 5  km க்கு உள்ளாகவே அமைந்துள்ளது.

இத்தலங்களை ஒரே நாளில் தரிசிப்பது மிகுந்த நற்பலன்களை அளிக்கக்கூடியது.

படத்தில் காண்பது ஈசான்ய பாகத்தில் உள்ள ஈசான்ய லிங்கேஸ்வரர்.
இவர்(நம் உலகம் உய்வதற்காக ) சாலை விரிவாக்கத்தின் போது கிடைக்கப்பெற்றார்.

கோயில் அமைந்துள்ள பகுதி சின்ன கோலடி  என்று வழங்கப்படுகிறது

அரும் பாடு பட்டு அற்புத திருகோவிலை அன்பர்கள் அமைத்துள்ளனர்.

இறைவன் பருத்த திருமேனியை உடைய அழகிய ஒளி பொருந்திய தோற்றம் கொண்டவர்...

கொடுத்து வைத்தவர்கள் சென்று தரிசனம் செய்யுங்கள் 


No comments:

Post a Comment