Friday, November 25, 2016

திருமண தடை நீக்கும் திருவேள்விக்குடி திருத்தலம் 


திருவேள்விக்குடி.மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்திலிருந்து. 3 கி.மீ. தூரத்தில் உள்ளது .

ஈசன் "மணவாளேஸ்வரர்' ஆக தோன்றி, இங்கு இறைவியை திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தார்.

அதன்படி அம்மனுக்கு கங்கணம் கட்டி, வேள்விகள் செய்து, பிரம்மா நடத்தி வைக்க திருமணஞ்சேரியில் மணம் புரிந்து கொண்டார். எனவே தான் இத்தலம் "திருவேள்விக்குடி' என அழைக்கப்பட்டது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் அன்னையின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.. அவ்வளவு அழகு.

தவத்தின் ஆரம்பத்தில் துயரத்துடன் இருந்த அன்னை, சிவன் தன்னை மணந்து கொள்கிறார் என்றவுடன் ஏற்பட்ட ஆனந்தத்தில் புன்னகை பூக்க அருள்பாலிக்கிறாள்.

இறைவன் மணவாளேஸ்வரர் , இங்கு வந்து வழிபடும்.திருமணம் ஆகாத ஆண்கள், பெண்களின் துயரத்தை போக்கி திருமணத்தை சிறப்பாக நடத்தி வைக்கிறார்.



No comments:

Post a Comment