Friday, August 12, 2016

தண்ணீர்குளம் மேவிய தயாபரன் 


சித்தத்தை சிவன் பால் வைத்த அடியார் பெருமக்களுக்கு அன்பு வணக்கங்கள் ........
சில தினங்கள் முன்பு திருவள்ளூர் மாவட்டம் , தொழுவூரை அடுத்த தண்ணீர்குளம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள  மங்களாம்பிகை சமேத  ஆபத்சகாயேஸ்வர சுவாமி திருக்கோயில் குறித்து பதிவு செய்திருந்தேன் ......  இப்பெருமான் பலகாலமாக வானமே  கூரையாக வீற்றிருந்தார் ....

அருகில் உள்ள அன்பர் திரு உதயகுமார் அவர்கள் இப்பெருமானுக்கு பூசை புனஸ்காரங்கள் செய்து வருகிறார்.....

பல முறை மேற்கூரை அமைக்கப்பட்டு வந்தது ...ஆயினும் அவை நிரந்தர மாக அமையவில்லை .

தற்போது இப்பெருமானுக்கு மேற்கூரை அமைத்து வருவதோடு அருகில் திருக்கோயில் ஒன்றை அமைப்பதற்கு , அடியார்கள் பெரு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் .....

அதற்கு தங்கள் மேலான ஒத்துழைப்பும் , பங்களிப்பும் தேவை படுவதால் , 
அடியார் பெருமக்களாகிய உங்களை இத்திருப்பணியில் பங்கு பெற அன்புடன் அழைக்கிறோம் ...

இத்திருக்கோயில்  திருநின்றவூர் ---திருவள்ளூர் சாலையில் புட்லூர் என்னும் இடத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .....

பேருந்து நிறுத்தம் புட்லூர்.
தங்கள் பொருளுதவியை கீழ்கண்ட  வங்கி கணக்கில் செலுத்தலாம் ....
உங்கள் தொடர்புக்கு அலைபேசி எண்களும் தந்துள்ளேன் .....

 உதயகுமார் 9444129438 9940449903 
.
STATE BANK OF INDIA
THIRUNINDRAVUR BRANCH
A/C NO 30330231064
IFSC CODE 10666





2 comments:

  1. சிவாயநம சிவகருணையால் சிறப்புடன் திருத்தொண்டு நடைபெற சிவனருள்வேண்டி. 09.08.16அன்று ஆபத்சகாயேஸ்வர்அருள்புரிந்தார்
    பேரழகு பெருமான் காணக்கண்டு கொண்டே இருக்கும் அற்புதமான தோற்றம். பேரழகு பெருமானுக்கு அழகான திருக்கோயில் தந்தருளவேண்டினேம்.

    ReplyDelete