Friday, October 2, 2015

தனியே  தன்னன் தனியே ---தில்லையம்பூர் --வலங்கைமான் -குடந்தை 


குடந்தை ---மன்னார்குடி சாலையில் வலங்கைமான் மாரியம்மன் கோயிலுக்கு  சற்று முன்பாக  வலதுபுறமாக வரும் சாலையில்  பயணித்தால் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது தில்லையம்பூர் கிராமம் .

இங்கு வயல் வெளியினூடே , தன்னன் தனியனாக சேவை சாதிக்கிறார் 
எம்பெருமான் , ஒரே துணையான நந்திஎம்பெருமானுடன் .
கூரை வேயப்பட்டுள்ளது.

காண்பதற்கரிய  அழகிய திருமேனி , காண காண திகட்டவில்லை .
















இப்பெருமானின் காலம், மற்றும் தல வரலாறு எதுவும் அறிய முடியவில்லை. கேட்டு அறிந்து கொள்ளவும் ஆட்கள் யாரும் இல்லை .

மேலும் இப்பெருமான் அங்கே கோயில் கொண்டிருப்பதையே பலரும் 
அறிந்திருக்கவில்லை.

அருகில்  பெரிய குளம் உள்ளது .

பெருமான் என்று கோயில் காண்பாரோ? அவருக்கே வெளிச்சம்.

Wednesday, September 30, 2015

அருள் தரும் அழகம்மை  உடனாய வைத்யநாதர் திருகோயில் --வளத்தாஞ்சேரி --ஸ்ரீபெரும்புதூர் 


அன்பர்களே, ரிஷிகளாலும் , முனிவர்களாலும் தேவர்களாலும்  வழிபட பெற்ற உருவாக்கப்பட்ட திருமேனிகள் நமக்கு கிடைக்குமாயின் ,அதை விட பெரும்பேறு வேறென்ன இருக்கிறது ? பாக்கியம் என்ன உள்ளது?

அப்படிப்பட்ட திருமால், பிரம்மனாலும் , சூர்ய சந்திரர்களாலும்,  தேவாரமூவராலும் வழிபடபெற்ற பெருமான் நமக்காக, நம்மை  கடைதேற்றுவதற்காக ,நமக்கு கிடைத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம்,ஸ்ரீபெரும்புதூர் வட்டம் போந்தூர் அஞ்சல், வளத்தாஞ்சேரி என்ற கிராமத்தில்.

சென்னையை சேர்ந்த அடியார் ,  வாருங்கள் புனித யாத்திரைக்கு  அமைப்பாளர் சிவத்திரு சிவதில்லை அவர்களால் இறைவன்
திருக்குறிப்பு உணர்த்தியதன் பேரில் வைத்யநாதர்  என பெயரிடப்பட்டு , அருளாளர் சிவத்திரு ஒளிஅரசு ஐய்யா அவர்களால் தெய்வ தமிழ் வேதங்கள் ஓத,வேள்விகள் முழங்க, நன்னீராட்டு விழாவுடன், நித்திய பூசை வழிபாடுகள் இனிதே துவங்கி வைக்கப்பட்டது.

அன்பர்களே..... 
இனி நாம் செய்ய வேண்டியது  ஒன்று தான்...
நமக்காக பூமியை பிளந்து தோன்றியுள்ள பெருமானை நாம் திரளாக சென்று 
வணங்குவோம்... நோய் நொடியின்றி வாழ்வோம்....வாருங்கள்....


மேலும் இத்திருகோயிலை பற்றிய விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்:9444 500309, 9962415413

இன்பங்களை அள்ளி அள்ளி  தரும் தலம் 


இன்பாம்பிகை உடனுறை இருள்நீக்கீஸ்வரர் திருகோயில் எறையூர் ---வல்லகோட்டை --காஞ்சிபுரம் மாவட்டம்.

புகழ்பெற்ற  வல்லகோட்டை முருகன் திருகோயில் அருகில் இருந்தும் அதிகம் அறியபடாத தலமாகவே உள்ளது இத்திருகோயில்.

பகலவன் தன் இரு மனைவியருடன் வழிபட்ட தலம்.
சிவபெருமான் சூரியனை தன் வல கண்ணாகவும் , சந்திரனை தன் இட கண்ணாகவும் ஏற்ற தலம் .
திருமணத்தடை நீக்கும் பால சந்திர விநாயகர் அருளும் தலம் .

இன்பான்பிகை இன்பத்தை அள்ளி அள்ளி தருபவள்.

இத்திருகோயில் வளாகத்தில் உள்ள புற்று மண் சகல வித நோய்களுக்கும்  அருமருந்து.

இன்னும்  சொல்லிக்கொண்டே போகலாம் இத்திருகோயிலின் மகத்துவத்தை .

இம்மாதிரி திருகோயில்களை நாம் இழப்பதால் தான் அந்நிய மதத்தினர் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகிறது.

அன்பர்களே , அவசியம் சென்று தரிசியுங்கள். பிறகு அடிக்கடி செல்வீர்கள்.
அத்தனை பேரழகு கொண்ட பிரான் இவர்.

தாம்பரம் --ஸ்ரீபெரும்புதூர் மார்க்கத்தில் எறையூர் கூட்டு ரோடிலிருந்து நான்கு
கிலோமீட்டர் தூரத்திலும் , வல்லகோட்டையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திலும் இத்திருகோயில் உள்ளது.









Monday, September 28, 2015

மேல்மணம்மேடு(பூந்தமல்லி) குறும்பலா நாதர் அருள்பெற வாருங்கள் அன்பர்களே 



➨நீண்ட வரிசையில் கால் கடுக்க காத்திருக்க வேண்டாம். மிகுந்த பொருட் செலவு இல்லை.


➨முக்கியமாக *ஜருகண்டி * இல்லவே இல்லை.


➨விஸ்ராந்தியாக இறைவனை எப்போது வேண்டுமானாலும் தரிசனம் செய்யும் வசதி உள்ளது.


➨திரு குற்றாலம் சென்று வழிபட இயலாதவர்கள், இங்கு நமக்காக எழுந்தருளியுள்ள குழல்வாய்மொழியம்மை உடனாய குறும்பலா நாதரை வழிபடலாம்.

➨மிக அருகில், மேல்மணம்மேடு என்னும் இடத்தில் (பூந்தமல்லி --- திருவள்ளூர் ரோடு) கோவில் கொண்டுள்ளார் இவர்.

பயன் படுத்திக்கொள்ளுங்கள் அன்பர்களே!!! குறும்பலா நாதரின் அருள் பெற வாருங்கள்!!!!!


திருகோயில் விரைவில் எழும்ப உள்ளது இப்பெருமானுக்கு.

திருப்பணியில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் :




Sunday, September 27, 2015

மாங்காடு --சிவகொழுந்தீஸ்வரர்--கொழுமணிவாக்கம் 






































மேற்கு நோக்கிய திருகோயில்கள் அரிதினும் அரிது . சென்னையில் மயிலை கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருகோயில்களை அடுத்து , மாங்காடு , கொழுமணிவாக்கம் சிவகொழுந்தீஸ்வரர் திருகோயில் 
மேற்கு பார்த்து அமைந்த தலமாகும் .

அது மட்டுமின்றி இத்திருகோயிலின் கோபுரத்தில் , சமய குரவர்களோடு , சந்தான குரவர்களின் திருமேனியும்
சிலா ரூபமாக அழகுற செதுக்கப்பட்டுள்ளது .

எம்பெருமான் சிவகொழுந்தீஸ்வரர் புலிபாணி சித்தரால் வடிக்கப்பட்டு , வழிபடபெற்றவர் என்பது கூடுதல் தகவல் .
அன்பர்களே, மாங்காடு செல்லும்போது மிக அருகில் இருக்கும் சிவகொழுந்தீஸ்வரரை தரிசனம் செய்ய மறக்காதீர்கள் .

யுகங்கள் பல கண்ட விளம்பூர் யுகம் கண்ட ஈசன் (வேத விளம்பீசன் ). 


.செய்யூர் தாலூகா, காஞ்சீபுரம் மாவட்டத்தில் விளம்பூர் உள்ளது. இங்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தன்னந்தனியாக அருள் புரிந்து வந்தார் ஈசன்.

ஆழி பேரலையால் ஆலயம் முற்றிலும் சிதைந்துவிட, இவருக்கு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது . அடியார் பெருமக்கள் தேவார திருவாசகங்கள் ஓதி வழிபட்டு வந்த நிலையில்
தற்போது அவரை வழிபட அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது .

பட்டா நிலத்தில் இவர் இருப்பதால் காவல் துறையினரை வைத்து மிரட்டப்படுவதாக முகநூலில் வெளிவந்துள்ள செய்தி மிக்க அதிர்ச்சியளிப்பதாக உள்ளது . தென்னாடுடைய சிவனை , என்னாட்டவற்குமாம் நம் இறைவனை இந்து தேசமாகிய நம் பாரத புனித பூமியில் வழிபட தடையா? இது என்ன கொடுமை ? நாம் பாகிஸ்தானிலா இருக்கிறோம்? இறைவனை வழிபட தடை செய்வதற்கு ?

காலம் இதற்கு கண்டிப்பாக பதில் சொல்லும்! இறை பக்தி ஒன்றே என்றும் வெல்லும்!!!!

Saturday, September 26, 2015

தென்னாடுடைய சிவனே போற்றி!என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி !

கொல்லசேரி (மாங்காடு--குன்றத்தூர் வழி ).இங்கிருந்து செம்பரம்பாக்கம் செல்லும் சாலையில் ஒரு வீட்டின் முன்புறம் வீற்றிருந்து அருள் பாலிக்கும் லிங்கத்திருமேனி இவர்.

அன்பர்களே,மாற்று மதத்தவரானாலும் , முகமதிய தம்பதியர் ஒருவர் இப்பெருமானை பூசித்து வருகிறார்கள் என்பது மகழ்ச்சி தரும் செய்தி!!!

ஆனால் இந்துக்களாகிய நாம் என்ன செய்ய போகிறோம் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி !!!

அன்பே சிவம் !!! அல்லாஹு அக்பர் !!!

Thursday, September 24, 2015

கண்ணொளி  அருளும்  கருணை  கடல் --ராமானுஜபுரம், கபிஸ்தலம் -குடந்தை 





அன்பர்களே , சூரியன், முறையற்ற தட்ஷன் செய்த யாகத்தில் கலந்து கொண்ட சாபம் தீர, தன் இரு மனைவியரான சாயா தேவி , உஷா தேவி ஆகியோர்களுடன் இத்தல இறைவனை வழிபட்டு இழந்த சோபையை  திரும்பப்பெற்றான் என்பது தல வரலாறு .

பகலவன் வழிபட்ட பரமன் அல்லவா? 

கோடி சூர்ய  பிரகாசத்துடன் கருவறையில் எம்பெருமான் விஸ்வநாதர் ,
அன்னை  அகிலாண்டேஸ்வரியுடன் வீற்றிருக்கும் அழகை காண நமக்கு கண் கோடி வேண்டும்.

இப்பெருமானை வழிபடுவதால் , கண் பார்வை தீட்சண்யம்  பெரும்.
வெப்ப சம்பந்தமான நோய்கள் தீரும்.

முன்னர் செய்த பாவங்கள் விலகும்.

எங்கே உள்ளது?

குடந்தை--திருவையாறு பிரதான சாலையில் உள்ளது ராமானுஜபுரம் .

Wednesday, September 23, 2015

ஸ்ரீ கைலாசன் ஈஸ்வரமுடையமஹாதேவர் திருக்கோவில், கேசாவரம். அரக்கோணம் தாலுகா.

முதலாம் குலோத்துங்க சோழன் அரசி ஏழுலகமுடையாள் நேரடிஆணைக்கிணங்க கட்டப்பட்டது.
காலம் (கி.பி. 1070 - 1120இத்திருகோயில் ஒரு நூற்றாண்டாய் சமய மற்றும் சமூக விரோதிகளால் சிதைத்து சேதப்படுத்தப்பட்டு விட்டது .

தற்சமயம் இக்கோவில் பூஜை மற்றும் புனர்நிர்மாணப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன, ஸ்ரீ கைலாசன் ஈஸ்வரமுடைய மஹாதேவர் சேவா டிரஸ்ட் என்ற பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளை மூலம் திருப்பணிகள் நடத்தப்படுகின்றன..
தக்கோலம் தலத்திலிருந்து 1 1/2 கி.மீ மற்றும் திருவாலங்காடு, திருமால்பூர், கூவம், இளமையின்கோட்டூர், கடம்பத்தூர் போன்ற எண்ணிலடங்கா சிவதலங்களை சுற்றுவட்டாரங்களில் கொண்டுள்ளது. அரக்கோணம் காஞ்சிபுரம் சாலையில் தக்கோலம் கூட்டு ரோட்டிலிருந்து சுமார் 8 கி.மி தொலைவில் உள்ளது.
திருப்பணிக்கான சேவையில் தங்களை இணைக்க விரும்பிடும் ஆன்மீக அன்பர்கள் தொடர்புகொள்ளவேண்டிய கைபேசி எண்கள்- 8148996154, 9840384201, 9578537949, 9976978492, 8122274612, என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.


சென்னையில் ஒரு ராமேஸ்வரம் --போரூர் 

இங்கிருந்து போருக்கு புறப்பட்டதால் இத்தலம் போரூர் ஆனது.

புறப்பட்டது யார்? ஸ்ரீ ராமபிரான் தான்.இலங்கைக்கு போருக்கு
புறப்படும் முன் தன நித்ய வழக்கப்படி சிவபூசை செய்ய அவர் தவறவில்லை.
இங்கு ராமபிரானுக்கு சிவபெருமான் குருவாக இருந்து வழிகாட்டியபடியால்
இது குருஸ்தலமாக போற்றப்படுகிறது .

ராமருக்கு மட்டுமல்ல!!! நம் வாழ்க்கைக்கும் வழிகாட்டி, இங்கு உறையும் ஸ்ரீ ராமநாத சுவாமியும் , அன்னை பர்வதவர்த்தினியும் தான்.

இறைவனது கம்பீரமான திருமேனி நம் கண்ணை விட்டு அகலாது. கொள்ளை  அழகு .

எங்கே உள்ளது ?

போரூர் முருகன் கோயில்  என்றால் சிறு குழந்தையும் வழிகாட்டும் .
அதே தெருவில் தான் இத்திருகோயிலும்  அமைந்துள்ளது.

அன்பர்களே ஒன்றை மறந்துவிடாதீர்கள் !! ஹனுமான் வழிபட்ட ஹனுமந்தலி ங்கேஸ்வரரும் , இரண்டு தெருக்கள் தள்ளி  அருள்பாலிக்கிறார் .விசாரித்துக்கொண்டு சென்று தரிசனம் செய்யவும்.