விஷ கடிகளால் மரணம் .....விஷ ஜுரங்களால் வேதனை .....இங்கு அறவே இல்லை ......
ஆம் அன்பர்களே .....சூரியன் வழிபட்ட (பரிதி என்றால் சூரியன்)திரு பரிதியூர் எனப்படும் பருத்தியூர் என்னும் தலத்தில் தான் இத்தகைய சிறப்பு ....
இங்கு கோயில் கொண்டு அருளும் அன்னை பிரசன்ன பார்வதி சமேத விஷஹரேஸ்வரர் இத்தகைய சிறப்பை அருள்பவர் ...
இங்கு வசிப்பவர்களை விஷ ஜந்துக்கள் தீண்டுவதில்லை ......விஷ ஜுரங்கள் பாதிப்பதில்லை என கூறுகிறார்கள் ......இங்கு வந்து தரிசிப்பவர்களுக்கும் இதே விதி பொருந்தும் .....
திருவாரூர் மாவட்டம் குடந்தை நன்னிலம் சாலையில் அமைந்துள்ளது இந்த சின்னஞ்சிறு கிராமம் ..விவசாயம் பிரதான தொழில் .....
அருகில் புகழ்பெற்ற ஸ்ரீ வாஞ்சியம் திருத்தலம் .அமைந்துள்ளது ..
ஆவணம் பருத்தியூர் என அழைக்கப்படும் இத்தலம் திருநல்லகூரூர் (கூகூர்)என வழங்கப்படும் தேவார வைப்பு தலம் அருகில் பிலாவடி தாண்டியதும், வருகிறது ....
பேருந்து நிறுத்தத்திலிருந்து சற்று தொலைவில் திருக்கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு நன்கு பராமரிக்கப்படுகிறது
புராண வரலாறு
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது தோன்றிய ஆலகால விஷம் சூரியனையும் விட்டுவைக்கவில்லை ....ஆம்! சூரியன் தன் அழகையும் ஆற்றலையும் இழந்து மெலிந்தான் ....
ஈசனை சரணடைந்தான் .பின் இறைவன் கட்டளைப்படி இத்தலத்திற்கு வந்து தீர்த்தம் உருவாக்கி பலகாலம் தவமிருந்து இங்கு சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ள இறைவன் அருளால் இழந்த தன் ஆற்றலை திரும்ப பெற்றதாக வரலாறு .
எனவே இறைவன் திருநாமம் விஷ ஹரேஸ்வரர் என வழங்கப்படுகிறது ....
பின்னர் ஆண்ட மன்னர்களால் திருக்கோயில் கட்டப்பட்டு , பின் ஆண்டுகள் செல்ல செல்ல சிதிலமடைந்து , தற்போது ஆன்மீக அன்பர்களின் பெரு முயற்சியால் திருக்கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது ....
அன்பர்களே பரிதி வழிபட்ட இப்பெருமானை நீங்கள் தரிசித்து நோய் இல்லா பெருவாழ்வு பெறுங்கள் ....அருகில் ஆவணம் ,ஸ்ரீவாஞ்சியம் போன்ற ஏராளமான தலங்கள் உள்ளன .
ஆலய அர்ச்சகர் அலைபேசி எண் தந்துள்ளேன் ...அவரை தொடர்பு கொண்டு திருக்கோயிலை நீங்கள் தரிசனம் செய்யலாம் .
அரும்பாடு பட்டு புராதன திருக்கோயில்களை புனரமைப்பது நம் நலத்திற்காகவே ....எனவே ஸ்ரீவாஞ்சியம் மற்றும் நவகிரக யாத்திரை செல்பவர்கள் தவறாமல் இத்தலத்திற்கு வந்து தரிசனம் செய்யுங்கள் ....இறைவன் அருள் பெற்று செல்லுங்கள்
அர்ச்சகர் திரு ராஜப்பா குருக்கள்
அலைபேசி எண் 9943343031
ஆம் அன்பர்களே .....சூரியன் வழிபட்ட (பரிதி என்றால் சூரியன்)திரு பரிதியூர் எனப்படும் பருத்தியூர் என்னும் தலத்தில் தான் இத்தகைய சிறப்பு ....
இங்கு கோயில் கொண்டு அருளும் அன்னை பிரசன்ன பார்வதி சமேத விஷஹரேஸ்வரர் இத்தகைய சிறப்பை அருள்பவர் ...
இங்கு வசிப்பவர்களை விஷ ஜந்துக்கள் தீண்டுவதில்லை ......விஷ ஜுரங்கள் பாதிப்பதில்லை என கூறுகிறார்கள் ......இங்கு வந்து தரிசிப்பவர்களுக்கும் இதே விதி பொருந்தும் .....
எங்குள்ளது ?
திருவாரூர் மாவட்டம் குடந்தை நன்னிலம் சாலையில் அமைந்துள்ளது இந்த சின்னஞ்சிறு கிராமம் ..விவசாயம் பிரதான தொழில் .....
அருகில் புகழ்பெற்ற ஸ்ரீ வாஞ்சியம் திருத்தலம் .அமைந்துள்ளது ..
ஆவணம் பருத்தியூர் என அழைக்கப்படும் இத்தலம் திருநல்லகூரூர் (கூகூர்)என வழங்கப்படும் தேவார வைப்பு தலம் அருகில் பிலாவடி தாண்டியதும், வருகிறது ....
பேருந்து நிறுத்தத்திலிருந்து சற்று தொலைவில் திருக்கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு நன்கு பராமரிக்கப்படுகிறது
புராண வரலாறு
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது தோன்றிய ஆலகால விஷம் சூரியனையும் விட்டுவைக்கவில்லை ....ஆம்! சூரியன் தன் அழகையும் ஆற்றலையும் இழந்து மெலிந்தான் ....
ஈசனை சரணடைந்தான் .பின் இறைவன் கட்டளைப்படி இத்தலத்திற்கு வந்து தீர்த்தம் உருவாக்கி பலகாலம் தவமிருந்து இங்கு சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ள இறைவன் அருளால் இழந்த தன் ஆற்றலை திரும்ப பெற்றதாக வரலாறு .
எனவே இறைவன் திருநாமம் விஷ ஹரேஸ்வரர் என வழங்கப்படுகிறது ....
பின்னர் ஆண்ட மன்னர்களால் திருக்கோயில் கட்டப்பட்டு , பின் ஆண்டுகள் செல்ல செல்ல சிதிலமடைந்து , தற்போது ஆன்மீக அன்பர்களின் பெரு முயற்சியால் திருக்கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது ....
அன்பர்களே பரிதி வழிபட்ட இப்பெருமானை நீங்கள் தரிசித்து நோய் இல்லா பெருவாழ்வு பெறுங்கள் ....அருகில் ஆவணம் ,ஸ்ரீவாஞ்சியம் போன்ற ஏராளமான தலங்கள் உள்ளன .
ஆலய அர்ச்சகர் அலைபேசி எண் தந்துள்ளேன் ...அவரை தொடர்பு கொண்டு திருக்கோயிலை நீங்கள் தரிசனம் செய்யலாம் .
அரும்பாடு பட்டு புராதன திருக்கோயில்களை புனரமைப்பது நம் நலத்திற்காகவே ....எனவே ஸ்ரீவாஞ்சியம் மற்றும் நவகிரக யாத்திரை செல்பவர்கள் தவறாமல் இத்தலத்திற்கு வந்து தரிசனம் செய்யுங்கள் ....இறைவன் அருள் பெற்று செல்லுங்கள்
அர்ச்சகர் திரு ராஜப்பா குருக்கள்
அலைபேசி எண் 9943343031
































