Friday, July 19, 2019

கன்னட மாத்வர்கள் சாதித்தனர் ......

கண் இமைக்கும் நேரத்தில் சீரமைக்கப்பட்ட வ்யாஸராஜ தீர்த்தரின் ஜீவ பிருந்தாவனம் ....!

அன்பர்களே......!

இதே ஒற்றுமை உணர்வு , இறை உணர்வு , சிரத்தை , சமய பற்று , அக்கறை யை நாமும் பின்பற்றினால் நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற பொக்கிஷங்களான , ஏராளமான திருக்கோயில்களை நாமும் சீரமைத்து நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கலாம் .....

அன்பர்களே ...!

ஆயிரம் இலைகள் ஒரு மலருக்கு சமமாகாது ......வானுற கட்டடங்கள் ஒரு திருக்கோயிலுக்கு ஈடாகாது ....
வாருங்கள் ......கஜா புயலினால் சின்னாபின்னமாக்கப்பட்ட ஒரு திருக்கோயிலின் சீரமைப்பிற்கு உதவிக்கரம் நீட்டுங்கள் ......

திருவாரூர் மாவட்டம் ,திருத்துறைப்பூண்டி வட்டம் ஆப்பரக்குடி அமிர்தலிங்கேஸ்வரர் திருக்கோயில் ....

இயற்கையின் கோர தாண்டவத்தினால் நிர்மூலமாக்கப்பட்ட இத்திருக்கோயிலை மீட்க களம் இறங்கியுள்ளனர் ஓம்காரம் மன்ற குழுவினர் ....

அலைபேசி எண்கள் தந்துள்ளேன் ..
வரும் ஆவணியில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டிருப்பதால் , விரைந்து பணிகளை முடிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் ...

தேவைப்படும் பொருட்கள் 

பணி நிறைவு செய்திட சிமெண்ட் 50 மூட்டை, (ரூ17.500), மணல் 15000, லேபர் 2000x 10 நாள் ( 20000), சுற்றுச்சுவர் அமைக்க இயலாத நிலையில் கம்பி வேலி அமைக்க ரூ.30000 தேவைப்படுகிறது.   ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ 350 மட்டுமே..


அன்பர்கள் தங்களால் இயன்ற அளவு சிமெண்ட் மற்றும் மணல் உதவி செய்து  கும்பாபிஷேகம் நடைபெற உதவிட வேண்டுகிறோம்.

அருகில் உள்ள  தேவார பாடல் பெற்ற திருக்கோயில் கச்சனம் 

ஓம்காரம் இறைபணி மன்றம். 9095265980, 8678900455

இந்த எண்களில் தொடர்பு கொண்டு உங்கள் உதவிகளை நீங்கள் அளிக்கலாம் ..
வங்கி கணக்கு விபரங்களும் அளிக்கப்பட்டுள்ளது  வங்கி கணக்கு எண் : 257001001917247
CITY UNION BANK
Thiruthuraipoondi Branch

IFSC CODE : CIUB0000257

அன்பர்களே ...! திருப்பணியில் ஈடுபட்டிருப்போர் பெரும் தனவந்தர்கள் அல்லர் ..

ஆன்மீக பற்று கொண்ட சாமான்யர்களான அந்த இளைஞர்களுக்கு உதவுவது நம் கடமை.



No comments:

Post a Comment