Thursday, November 22, 2018

திகிலூட்டும் அடர்ந்த முந்திரி காடு .......
ஆங்காங்கே சிதறி கிடக்கும் நூற்றுக்கணக்கான லிங்க மூர்த்தங்கள் ....
கண்ணுக்கெட்டும் தூரம் வரை மனித சஞ்சாரம் கிடையாது ...
சற்றே அமானுஷ்யத்துடன் கூடிய ஒரு ஆன்மீக பயணத்திற்கு நீங்கள் தயாரா?

அன்பர்களே.....!

வாருங்கள் .....புறப்படுங்கள் ஒரு குழுவாக.....விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பாண்டிச்சேரி அருகில் உள்ள பூத்துறை கிராமத்திற்கு .(மணவெளி என்றும் சிலர் கூறுகின்றனர் )

எங்குள்ளது....?

திண்டிவனம் --பாண்டி சாலையில் புகழ் பெற்ற பஞ்சவடி ஆஞ்சநேயர் திருக்கோயில் அடுத்து வரும் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு(பூத்துறை) நிறுத்தத்தில் இறங்கி ஆட்டோ மூலம் முந்திரி காட்டினுள் அமைந்துள்ள இத்தலத்தை அடையலாம் ..

ஆட்டோ ஓட்டுனர்கள் மிகவும் உதவியாக உள்ளனர்....சோலையப்பன் என்பவரது அலைபேசி எண் தந்துள்ளேன் 

சொந்த வாகனங்களில் செல்பவராக இருந்தால் பூத்துறை கிராமம்  ஹாரிசான் பேக்ஸ் என்கிற தனியார் நிறுவனம் அடுத்து வரும் தெருவின் வழியே சென்று அங்குள்ள ஒரு அம்மன் கோயில் தாண்டியவுடன் வலதுபுறம் வரும் சற்றே  உள்ளடங்கிய ஒரு முந்திரி காட்டினுள் சென்று நூற்றுக்கும் மேற்பட்ட பெருமான்களை நீங்கள்  வணங்கி மகிழலாம் ....பூஜை பொருட்களை கண்டிப்பாக கூட்டு ரோட்டில் வாங்கி கையில் வைத்திருக்க வேண்டும் ..

இப்பகுதியில் வசிக்கும் மக்களே இத்தலத்தை பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை ....

நூற்றுக்கணக்கான இந்த லிங்க திருமேனிகள் இங்கு வந்தது எப்படி? யார் பிரதிஷ்டை செய்தனர் ...தல வரலாறு ..? என எதையும் அறிய முடியவில்லை ...இத்திருக்கோயிலில் 63 நாயன்மார்களும் லிங்க திருமேனியராகவே காட்சியளிக்கின்றனர் ....அம்மனும் லிங்க உருவில் தான் அருள்கிறாள் ...

அருகே, செல்லும் வழியில் உள்ள திருச்சிற்றம்பலம் கைலாயநாதர் திருக்கோயில் திருப்பணி செய்யப்பட்டு பொலிவுடன் திகழ்கிறது ...தரிசனம் செய்ய மறவாதீர்கள் ...

அதேபோன்று கிடைத்தற்கரிய இத்தலத்தையும் பக்தர்கள் வழிபட ஏதுவாக புனரமைக்கப்பட வேண்டும் ..

பெயர்ப்பலகை இல்லாதமையால் முதற்முறை வருபவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் .இக்குறையையும் நீக்கவேண்டும் ....

அருகே தேவார பாடல் பெற்ற திருக்கோயில்கள் நிறைய உள்ளன .....
கிளியனூர் , ஒழித்தியாப்பட்டு ,இரும்பை மாகாளம் போன்றவை அவற்றுள் சில ...

அன்பர்களே .....

இத்திருத்தலத்தை வெளிச்சத்திற்கு , வெளிஉலகிற்கு கொண்டு வரும் பொறுப்பு நம் கையில் தான் உள்ளது....

நீங்கள்சென்றுதரிசித்து மறவாமல் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் 

ஆட்டோ ஓட்டுநர் 
திரு சோலையப்பன் 9597660851











1 comment:

  1. சிவாயநம,
    இங்குள்ளவை சிவ லிங்கங்கள் அல்ல, அனைத்தும் சுதை சிற்பங்கள், லிங்கம் எது பொம்மை எது என்றுகூட வித்தியாசம் தெரியாதா உமக்கு ?

    ஆலயங்களையும் இறைவனையும் தேடுவது நல்ல விஷயம் தான், ஆனால் இதுபோன்ற தவறான தகவல்களை பகிரக்கூடாது... செல்வி ராமலிங்கம் - சென்னை சைவ குழு -9566270154

    ReplyDelete