Wednesday, November 14, 2018

நாடி செல்லுங்கள் நலிவடைந்த திருக்கோயில்களை .......
அன்பர்களே .....ஏன் ? என்ன காரணம்?

 நீங்கள் தேடி சென்று மணிக்கணக்கில் வரிசையில் நின்று , உண்டியலில் செலுத்தும் பணம் அந்த திருக்கோயில் வளர்ச்சிக்கோ , அங்கு பணிபுரியும் அர்ச்சகர்கள் வறுமையை போக்கவோ 

பயன் படுத்தப்படுவதில்லை ....மாறாக அவை கோடியில் புரள்பவர்களின் கைகளுக்கு தான்  செல்கிறது.

இறைவனுக்கு மாற்று வஸ்திரம் கூட இல்லாத திருக்கோயில்கள்      இங்கு பல உள்ளன .


 மின்சார கட்டணம் செலுத்த இயலாத இருளில் மூழ்கி கிடைக்கும் திருக்கோயில்கள் பல .


 திருப்பணி நிறைவேற்றப்படாததால் அழிவின் பிடியில் சிக்கியிருக்கும் திருக்கோயில்களோ  பலப்பல .


 ஏழை அர்ச்சகர்களுக்கு மாத வருமானமாக ரூ 150/- கூட வழங்க வக்கில்லாத பல ஆண்டுகள் நிலுவையில் வைத்திருப்பவர்களுக்கா உங்கள் உண்டியல் பணம்?


பக்தர்கள் வருகையின்மையால் பெரும்பாலும் பூட்டியே கிடைக்கும் பாடல் பெற்ற   பல திருத்தலங்கள் காப்பாற்றப்படுவதற்கு ஏன் உங்கள் உழைப்பு பயன்படக்கூடாது ?


வாருங்கள் ....அப்படி ஒரு பாடல் பெற்ற திருத்தலத்தின் நிலையை காணலாம் ...


திருப்பெரும்புலியூர் .....

அன்றலர்ந்த பூக்களை பறிக்க வசதியாக புலிக்கால் கேட்டு பல ஆண்டுகள் தவமிருந்து பெற்ற புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்படும் வியாக்ர பாதர் , ஆதிசேஷனின் அவதாரமான 
பதஞ்சலி முனிவர் மற்றும் தேவாதி தேவர்கள் பலராலும்,மூவராலும்  வணங்கி வழிபட பெற்ற திருத்தலம் இது ...

இங்கு அமைந்துள்ள சௌந்தர்யநாயகி சமேத வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் மேற்கூறிய அவலங்களுக்கு முற்றிலும் பொருந்தும்.   


அன்பர்களே .....இத்தலத்தின் பெருமையை ஆயிரம் நா கொண்ட ஆதிசேஷனாலும் விவரிக்க முடியாது ..


இன்றைய காலகட்டத்தில் நாம் அனுபவிக்கும் அனைத்து துன்பங்களுக்கும் இத்திருக்கோயில் சிறந்த பரிகாரமாகும் ....கருவறையில் ஒளி பொருந்திய திருமேனியராய் கருணையே உருவானவராய் வீற்றிருக்கும் இறைவனை காணும்போது நம் துன்பங்கள் விலகி ஓடிவிட்டதை நம் அனுபவத்தில் உணரலாம் 




பக்தர்கள் வருகையின்மையால்  , குன்றிலிட்ட விளக்கு போல் பிரகாசிக்க வேண்டிய இத்திருக்கோயில் குடத்திலிட்ட விளக்கு போல் சோபையின்றி வருமானமின்றி வெறிச்சோடி இருக்கிறது ....

அருகில் உள்ளவர் திருக்கோயிலை திறந்து காட்டி தரிசனம் செய்ய உதவுகிறார்கள் ....


இருப்பிடம் :  இத்திருக்கோயில் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள திருநெய்த்தானம் எனப்படும் தேவார பாடல் பெற்ற தலத்திற்கு அருகில் திருக்காட்டுப்பள்ளி செல்லும் பாதையில் அமைந்துள்ளது ...


நாம் செய்ய வேண்டியது என்ன?


அன்பர்களே மாதம் ஒருமுறையாவது இத்தகைய பெறற்கரிய திருக்கோயில்களை குடும்பத்துடன் சென்று வழிபடுங்கள்....


நம் குழந்தைகளுக்கு, இளைய தலைமுறையினருக்கு புராண வரலாறுகளை அவர்கள் அறியுமாறு எடுத்து கூறுங்கள் ...


நீங்கள் சென்று வருவதோடு நின்று விடாமல் பலரும் அறிந்து கொள்ளுமாறு அதனை பகிர்ந்து கொள்ளுங்கள் ....


தற்போது தான் முகநூல் , whatsapp என்று ஏராளமாக இருக்கின்றனவே .....அவற்றை உபயோகமாக நாம் பயன்படுத்துவோம் . பழத்திருக்கோயில்களை போற்றுவோம் ..பராமரிப்போம் ..












No comments:

Post a Comment