Friday, December 30, 2016


கொரநாட்டு கருப்பூர், குடந்தை.......

ஒருசமயம் காவேரியில் மிதந்து வந்த ஒரு பெட்டியை கிராம மக்கள் கண்டனர். திறந்து பார்த்தபொது மார்பளவே உள்ள ஒருஅம்மன் சிலையை கண்டு அதிசயித்தனர்.
பின்னர் காஞ்சி மகானின் ஆணைகிணங்க இங்குள்ள சுந்தரேஸ்வரர் திருகோயிலில் பெட்டிகாளி பிரதிஷ்டை செய்யப்பட்டாள். அன்று முதல் இப்பகுதியின் காவல் தெய்வமாக பிரசித்திபெற்று விளங்கிவருகிறாள்.
உக்கிரமாக காட்சிஅளித்தாலும் மிகுந்த கருணை உள்ளம் கொண்டவள்.
வருடத்திற்கு ஒருமுறைதான் அதுவும் பெட்டியோடுதான் இவள்
ஊர்வலம் காண்கிறாள். அப்போது மிகுந்த உக்கிரத்தோடு காணப்படுவதால் ஒரே ஓட்டமாக எங்கும் நிற்காமல் எடுத்து சென்று
சன்னதியை அடைந்த பின்னரே நிறுத்துகின்றனர்.

வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் பூஜை நடைபெறும் .....அப்போது இவள் தரிசனம் பெறலாம் ...
ராகு கேது தோஷம் உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் கிடைக்க பெறாதவர்கள் , இங்கு வந்து வழிபட்டு .பலன்  அடைகிறார்கள்  

மூலவர் இறைவன் சுந்தரேஸ்வரர்.....அன்னை அபிராமி

குடந்தை அருகே சென்னை சாலையில்  2 கிலோமீட்டரில் உள்ளது கொரநாட்டு கருப்பூர் 


















No comments:

Post a Comment