Friday, December 9, 2016

சூரியனார்கோயிலில் ஒரு சந்திர தோஷ பரிகார தலம்...........
மக்களால் அறியப்படாத மகத்தான சிவாலயம் 

திருமாந்துறை(சூரியனார்கோயில்) அட்சய நாத சுவாமி திருக்கோயில் , மணலூர் அஞ்சல் 

↝இங்கு வந்து ஸ்ரீ யோகநாயகி சமேத அட்சயநாத ஸ்வாமியை வணங்கிய பின்னரே சூரியனார் கோயில் சென்று வணங்க வேண்டும் என்பது மரபு .
இது இந்த ஆலய வரலாற்றிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது 

↝சந்திரன் தன் க்ஷய (க்ஷயம் என்றால் குறைதல் என்று பொருள்) ரோகம் தீர வணங்கிய தலம் ...

↝ விருச்சிக ராசி காரர்கள் , ரோகினி நட்சத்திரம் கொண்டவர்கள் வணங்க வேண்டிய தலம் 

↝ காலமா முனிவருக்கும் , நவகிரஹங்களும் க்ஷய ரோகம் நீங்குவதற்காக இங்குள்ள அட்சய தீர்த்தத்தில் நீராடி 
அட்சய நாத ஸ்வாமியை வணங்கி , துயர் நீங்கப்பெற்ற தலம் .

↝  அன்னதோஷத்தால் துன்புறுவோர்கள்  ...அதாவது உண்ண  உணவு இருந்தும் சாப்பிட முடியாமல் துன்புறுவார்கள், வறுமை காரணத்தால் உணவின்றி பட்டினி கிடப்பவர்கள் , பெற்றோரை பசியால் 
வாட செய்ததால் ,இறைவனுக்கு படைக்காமல் உண்டதால் ஏற்பட்ட தோஷம் இப்பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதால் நிவர்த்தியாகும் .....
↝சூரியனுக்கு ஒளி கிரணங்கள் குறைந்தபோது , ஒளி பிரகாசத்தை கொடுத்த தலம் 

↝  இங்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் அட்சய த்ரிதியை அன்று வணங்குவதால் குபேர சம்பத்து ஏற்படும் .......

↝ அன்று இங்கு ஒன்றல்ல இரண்டல்ல 64 பொருட்களால் பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யப்படுகிறது .
இதை பிரசாதமாக உண்பதன் மூலம் அனைத்து விதமான உடல் குறைகள் நீங்கும் ...

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த திருக்கோயில் ஆடுதுறை அருகே சூரியனார் கோயில் பின்புறம்(அரை கிலோமீட்டர்)  அமைந்துள்ளது ..
மிக சக்தி வாய்ந்த இந்த திருக்கோயில் பக்தர்களால் அதிகம் அறியப்படாமல் உள்ளது மிகவும் வேதனை ...

சூரியனார் கோயில் வரும் பக்தர்கள் முதலில் அட்சயநாத ஸ்வாமியை வணங்க வேண்டும் .....
ஆனால் இந்த திருக்கோயில் அதிகம் பக்தர்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது ...
அட்சய திருதியை அன்று மட்டும் திருவிழா காண்கிறது இந்த திருக்கோயில் .....

ஆலய அர்ச்சகர் திரு ராஜு சிவம் .....
அலைபேசி எண் :9994032380



No comments:

Post a Comment