Thursday, August 29, 2019

அற்புத பலன் தரும் அரிய திருக்கோயில் 

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வாலி வழிபட்டு தன் ப்ரஹ்மஹத்தி தோஷம் நீக்கி கொண்ட தலம் . 

யாரெல்லாம் வழிபடலாம் ..?

⇝ நாக தோஷம்,காலசர்ப்ப தோஷம் , அதனால் திருமண தடை , மழலை         பாக்கியம் தடைபடுதல் .
⇝ வாஸ்து குறைபாடு , வீடு கட்டுவதில் இழுபறி ....
⇝ கலைத்துறையில் (சினிமா , டிராமா , நடனம் , மெல்லிசை) பிரகாசிக்க முடியாமல் முன்னேற்றம்  தடைபடுதல் 
⇝வியாபாரத்தில் எதிரிகளால் தொல்லை 
⇝கல்வியில் மந்த நிலை 
⇝ களத்திர தோஷம் அதனால் இல்லவாழ்க்கையில் நிம்மதியின்மை 

உங்கள் துன்பம் எதுவாயினும் வாருங்கள் காரியசித்தி கணபதி, .ஆனந்தவல்லி அம்பாள் உடனுறை திருவாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு ....

இவருக்கு செய்யப்படும் பாலபிஷேகம் கருநீல நிறமாக மாறுவது பேரதிசயம் ...
காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இப்பாலை பருகினால் தோஷத்திலிருந்து முற்றிலும் விடுபடுவர்.

எங்குள்ளது ...?

திருவள்ளூர் மாவட்டம் , பொன்னேரி வட்டம் , பஞ்சட்டி பேருந்து நிறுத்தத்திலிருந்து 2 1/2 கிலோமீட்டர் தூரத்தில் நத்தம் என்று தற்போது அழைக்கப்படும் கிராமத்தில் வீற்றிருந்து அருள்பலிக்கிறார் வாலி வழிபட்ட வாலீஸ்வர் பெருமான் ....
புராண பெயர் இகணன் பாக்கம் ....(இகணன் , ப்ரம்மா வின் பெயர் )
ப்ரம்மா நாரதரின் ஆலோசனைப்படி இங்குள்ள காரிய சித்தி கணபதியை வழிபட்டு இழந்த தன் படைப்பு தொழில் ஆற்றலை பெற்றார் ...

இவரை வழிபடுவதால் நடக்கவே நடக்காது என்று நம்பப்படும் காரியங்களும் விரைவில் ஈடேறுவது கலியுக அதிசயமாகும் .

இங்குள்ள மற்றோர் அதிசயம் உமா சகித பிரதோஷமூர்த்தி .....
வேறெங்கும் காண இயலாத வகையில் இவர் உமையாளை தன ஒருகையால் அணைத்தவாறு உள்ளார் ....


பிரதோஷ தினத்தில் இப்பெருமானை வழிபடுவோர் இல்லற வாழ்க்கையில் பிணக்குகளின்றி வாழ்வர் 

சிவாலயமாக இருப்பினும் , இக்கணபதியே இங்கு பிரதான தெய்வமாக வழிபட படுகிறார் ......

அன்பர்களே .....

முறையான பேருந்து வசதியின்மையால் தங்கள் சொந்த வாகனத்தில் வருவது சால சிறந்தது .செங்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து , கும்மிடிப்பூண்டி , பழவேற்காடு ,பொன்னேரி செல்லும் பேருந்துகளில் 
ஏறி பஞ்சட்டியில் இறங்கி கொள்ளலாம் ...

அர்ச்சகர் அலைபேசி எண்கள் தந்துள்ளேன் ...

மிக சிறந்த பரிகார தலம் ஆதலால் அவரிடம் முன்கூட்டியே தெரிவித்து விட்டு செல்லலாம் ...இங்குள்ள தீர்த்தமும் வாலியால் உருவாக்கப்பட்டதே ......இது வாலி தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது .
இத்தீர்த்தத்தில் நீராடுவது கங்கை யில் நீராடுவதற்கு சமமாகும் ....

இத்தீர்த்தத்தில் நீராடி இப்பெருமானை வழிபடுவதால் சகல தோஷங்களை நீக்குவதோடு , சுருட்டப்பள்ளி திருத்தலத்தை நீங்கள் 3 முறை வழிபடுவதின் பலனை பெறலாம் ...

அருகில் உள்ள பஞ்சேஷ்டி  அகஸ்தீஸ்வரர் திருக்கோவிலும் மிக சிறந்த பரிகார தலமே .......

இத்துணை பெருமைகள் மிக்க பரிகார தலம் வெளிச்சத்திற்கு வராமலேயே உள்ளது ....

கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன் ?

அன்பர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் ...அர்ச்சனை பொருட்களை கையோடு எடுத்து செல்லுங்கள் ..

திருக்கோயில் அர்ச்சகர்கள் :

சுவாமிநாத குருக்கள் , நத்தம் , அலைபேசி எண் :94440 53356

சுரேஷ்பாபு குருக்கள் , நத்தம் , அலைபேசி எண் :94440 91441






No comments:

Post a Comment