Thursday, February 16, 2017

அல்லல் போம் !!!  அன்னை வயிற்றில் பிறந்த துன்பம் போம்!!!

பிறவி பெருங்கடலை இறைவன் அருள் இன்றி நீந்துவது அவ்வளவு எளிதான  காரியமல்ல ......
எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்கிறார் மாணிக்கவாசகர் ....
ஞானிகளும் ,மகான்களும் மீண்டும் மீண்டும் பிறப்பதை விரும்பவில்லை ....அவர்கள் பிறவா தன்மை பெறவே 
விரும்பினர்......

அன்பர்களே மீண்டும் அன்னை வயிற்றில் பிறவா தன்மை அருளுவதால் இத்தலத்திற்கு கருவிலி என்ற சிறப்பு பெயர்..

குடந்தை --பூந்தோட்டம் சாலையில் கூந்தலூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கருவிலி எனப்படும் இத்தலம் .....அழகிய நந்தவனத்துடன் கூடிய , மிக சுத்தமாகவும் சிறப்பாகவும் பராமரிக்கப்படும் இத்திருக்கோயில் உறையும் இறைவன் சர்குணேஸ்வரர் ....இறைவி சர்வாங்க சுந்தரி .......சுமார் 6 ஆடி உயரத்துடன் அற்புதமாக சேவை சாதிக்கும் அழகை காண கண் கோடி வேண்டும் ...

இத்தலத்தில் இப்பெருமானையும் , சர்வாங்க சுந்தரியையும் வணங்குபவர்களுக்கு மீண்டும் பிறப்பு என்பது கிடையாது ....

தேவார பாடல் பெற்ற முக்தி தலமாகிய இத்திருக்கோயிலை அன்பர்கள் அவசியம் தரிசித்து  பலன்   பெற வேண்டும் 



No comments:

Post a Comment