Sunday, January 27, 2019

வேதங்கள் வழிபட்ட வேதநாயகன் 

சகல தோஷங்களையும் நீக்கும் பரசுராம ஷேத்திரம் 
பித்ரு கடன்களை நிறைவேற்ற உகந்த தலம் 
மஹாலக்ஷ்மி வழிபட்ட மகத்தான தலம் 
இரும்பு சம்பந்தப்பட்ட கனரக தொழில் முனைவோர் விரும்பி வழிபட வேண்டிய தலம் 
நாயன்மார்களில் ஒருவரான ஆனாய நாயனார் அவதரித்த  ,முக்தி பெற்ற தலம் 
ஜைமினி மகரிஷி சாம வேதத்தை 1000 சாகைகளாக பிரித்து அருளிய தலம் 
சந்தர்ப்பவசத்தால் ஏழ்மை நிலை அடைந்தவர்கள் மீண்டும் இழந்த செல்வத்தை அடைய வழிபட வேண்டிய தலம் .......

அன்பர்களே இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இத்திருக்கோயிலின் பெருமையை ...

பரசுராமர் தன தாயை கொன்ற பாவம் நீங்கவும் , சண்டேசர் தன தந்தையை கொன்ற பாவம் போகவும் இங்கு வந்து சாம வேதீஸ்வரரை வழிபட்டுள்ளனர் ..

குபேரனும் இங்கு வழிபட்டுள்ளதாக தல புராணம் குறிப்பிடுகிறது ...

அன்பர்களே பெறற்கரிய இத்திருக்கோயிலை நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒருநாளேனும் வணங்கி அருள்பெற வேண்டாமா..? 

வாருங்கள் திருமங்கலம் லோகநாயகி உடனுறை சாமவேதீஸ்வரர் திருக்கோயிலுக்கு ..திருச்சி மாவட்டம் , லால்குடி வட்டம் தேவார பாடல் பெற்ற மாந்துறை அருகில் உள்ளது திருமங்கலம் கிராமம் .

இத்திருக்கோயில் காலை 7 மணியிலிருந்து 11,30  மணி வரையிலும் மாலை 4.30 மணியிலிருந்து 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும் ...அலைபேசி எண்களும் தந்துள்ளேன் ..

லால்குடி யிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் உள்ளது ..சுற்றிலும் ஏராளமான தலங்கள் சூழ நடுநாயகமாக ஒரு ஆன்மீக பொக்கிஷமாக இத்திருக்கோயில் விளங்குகிறது 

அன்பர்களே கருவறையில் ஒளிபொருந்திய கம்பீரமான திருமேனி கொண்டு விளங்கும் சாமவேதீஸ்வரரை தரிசித்த மாத்திரத்தில் நம் துன்பங்கள் பறந்தோடும்...

அபய ஹஸ்த குருபகவான் , வடக்கு நோக்கிய காக வாஹனம் உடைய சனிபகவான் இத்தலத்தின் மற்றுமோர் சிறப்பாகும் ...

பித்ரு தோஷம் உடையவர்கள் இத்திருக்கோயில் வந்து வணங்க அவர்கள் பித்ரு தோஷத்திலிருந்து முழுமையாக விடுபடுவர் என்பது ஆன்றோர்கள் வாக்கு .....

குருக்கள் :பாலசுப்பிரமணிய சிவா 
98654 22027

ஞானஸ்கந்த குருக்கள் 

0431--2541040 , 97100 64571





No comments:

Post a Comment