Tuesday, June 21, 2016

நிதி சுமையால் நின்று போன அரசவனங்காடு  அரன் ஆலயம்...

அன்பர்களே  குடந்தை திருவாரூர் சாலையில் அரசவனங்காடு உள்ளது .....
ஒரு காலத்தில் அரச மரங்கள் அடர்ந்த பகுதியாக இருந்து வந்தது ...இங்கு மிக புராதன மான பக்தர்கள் வருகை அற்ற கைலாசநாதர் திருக்கோயில் இருக்கிறது ...

இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் இடது புறம் திரும்பும் சாலையில் பயணித்தால் தீபன்குடி என்னும் சிற்றூர் வருகிறது ...இங்கு பிரம்மாண்டமான ஜைன ஆலயம் ஒன்று உள்ளது ..இதன் அருகில் பன்னெடும் காலமாக வெட்ட வெளியில் அருள்பாலித்து வந்தார் கைலாசநாதர் .....


சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவர்  இவர் என கணக்கிடப்பட்டுள்ளது .....பெருமான் திருமேனி எங்கும் உளி கொண்டு  செதுக்கியது போன்று  காணப்படுகிறது .....
தற்போது ஓலை கூரையில் வைத்து பூசிக்கப்படுகிறார் ....சுமார் 45 லட்சம் செலவில் திருக்கோயில் அமைக்கப்பட்டு விட்டது ....இன்னமும் 40 லட்ஷம் இத்திருக்கோயிலை பூர்த்தி செய்ய தேவைப்படுகிறது ....
அம்பாள் , மிகுந்த எழில் வாய்ந்த விநாயகர் ,நந்தி ,முருகன் ஆகியோரும் உள்ளனர்.
ஆச்சர்யமான உண்மை என்னவென்றால் இந்த திருப்பணி ஒரே குடும்பத்தினரால் செய்யப்பட்டு வருகிறது .

ஆனால் ஒரே ஒருவரால் இதற்கு மேல் எப்படி செலவிட முடியும் ......அன்பர்களாகிய  நம் பங்களிப்பும் தேவை  அல்லவா?

நீங்கள் இத்திருப்பணியில் பங்கு பெற விரும்பினால் கீழ் கண்ட அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் .இவர் கோயில் அருகிலேயே உள்ளார் ...

திரு பழனி
அலைபேசி எண் :7373205099

தீபங்குடி கைலாசநாதரை எப்போது வேண்டுமானாலும் தரிசிக்கலாம் ....
இவரை தரிசிப்பதால் நாம் எண்ணிய யாவும் கைகூடும் ...இது அனுபவத்தில் கண்ட உண்மை ..


No comments:

Post a Comment