Monday, July 2, 2018

மறைந்து நின்றிந்த மாமணி சோதியான் .......பூமியை பிளந்து வந்துள்ளான் நாம் உய்வதற்காக ....

எத்தனை எத்தனை ஞானிகள் , ரிஷிகள், மகான்கள் , முனிவர்கள் சித்த புருஷர்களால் வணங்க பட்டிருப்பார் இவர்?  எத்தனை திருவிழாக்கள் , உற்ஸவங்கள் கண்டிருப்பார் ? எத்தனை பிரம்மாண்டமான திருக்கோயிலில் குடியிருந்து அருள்புரிந்திருப்பார்? 

இப்படிப்பட்ட திருமேனிகள் நமக்கு கிடைக்குமாயின் அதை விட நாம் செய்துள்ள தவம் வேறென்ன உள்ளது ?

வராது போல் வந்த மாமணியாக வந்துள்ள இப்பெருமானுக்கு திருக்கோயில் அமைக்க நாம் கொடுத்து அல்லவா வைத்திருக்க வேண்டும் ? 

வாருங்கள் போவோம் அன்பர்களே அத்திப்பாக்கம் என்னும் கிராமம் நோக்கி .....
இங்கு மிக பிரம்மாண்டமான திருமேனியராக, நம்மை ஆட்கொள்வதற்காக பலகாலம் பூமியில் புதைந்திருந்த 
இப்பெருமான் கண்டெடுக்கப் பட்டுள்ளார் ..சுமார் 2500 ஆண்டுகள் பழமையானவராக கருதப்படுகிறார் ..
கிராம மக்களால் தற்போது திருப்பணி துவங்கப்பட்டுள்ளது ....

தற்போது தரைத்தளம் வரையே கட்டப்பட்டுள்ளது ....எஞ்சியிருக்கும் பணிகளை முடிக்க , அன்பர்களே அனைவரது ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது ...
விவசாயத்தை பிரதானமாக கொண்ட கிராம மக்களால் பிறரது உதவி இல்லாமல் திருப்பணியை முடிப்பது மிக சிரமம் அல்லவா?  

ஆகவே இதை கண்ணுறும் ஆன்மீக அன்பர்கள் , சிவ பக்தர்கள் , பொது மக்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் .....

கீழ் வரும் அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு உங்கள் உதவியை நல்குங்கள் ....இறைவன் அருளுக்கு பாத்திரமாகுங்கள் ......
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கிராம மக்களுக்கு உதவிடுங்கள் ...

இருப்பிடம் :  அத்திப்பாக்கம் கிராமம் விழுப்புரம் மாவட்டம் , திருக்கோவிலூர் வட்டம் , திருவண்ணாமலையிலிருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் உள்ளது .....

அலைபேசி எண்கள் :

சிவ ஈஸ்வரன் 9176757479
சிவ  ஏழுமலை (பாண்டிச்சேரி) 8300086563
சிவ  மணிகண்டன்(அத்திப்பாக்கம்) 8523940178

சிவ  ஏழுமலை முதலூர் 9865629567





Saturday, June 23, 2018

விபத்திலிருந்து காக்கும் விடைவாகனன் 

வாகன விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தற்போது சர்வசாதாரணமாகிவிட்டது.
நாளிதழ்களை திறந்தால் தினசரி 10 வாகன விபத்துகளாவது அங்கங்கு ஏற்படுவதை நாம் பார்க்கிறோம்.
விபத்துகள் இல்லாத நாட்களே இல்லை என்றாகிவிட்டது.

இத்தகைய விபத்துகளில்லிருந்து நம்மை பாதுகாத்து கொள்வதற்கு நாம் வணங்க வேண்டியது தஞ்சை மாவட்டம் திருவையாறு, திருநெய்த்தானம் அருகில் இருக்கும் "திருப்பெரும்புலியூர்" வியாக்ரபுரீஸ்வரர்
ஆலயமாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிக புராதனமான ஆலயத்தில், நம் வாகனங்கள் பழையதோ புதிதோ, எடுத்துச் சென்று வழிபட, விடைவாகனன் அருளால், விபத்தில்லா வாழ்வு நாம் பெறலாம்.


ஐந்து புலியூர்களில் இதுவும் ஒன்று .

மற்ற புலியூர்கள் , திருஓமாம்புலியூர் , எருக்கத்தம்புலியூர் ,பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்),பாதிரிபுலியூர் 

தஞ்சையிலிருந்து ,கும்பகோணத்திலிருந்து ,திருவையாறிலிருந்தும் பேருந்து வசதிகள் நிறையவே உள்ளது ..

இறைவி :சௌந்தர்யநாயகி , சம்பந்தரால் தேவார பாடல் பெற்ற இத்தலம் ராஜராஜ சோழன்  காலத்தியது ..
அருணகிரி நாதரும் இத்தல முருகன் குறித்து திருப்புகழ் பாடியுள்ளார் ..

தலவிருட்சம் சரக்கொன்றை .....தீர்த்தம் காவேரி 





Tuesday, June 12, 2018

நலிவடைந்த திருக்கோயில்களில் வழிபாடு செய்யலாமா?
சிதைந்த திருமேனிகளை வணங்கலாமா?

பலருக்கும் இந்த சந்தேகம் உள்ளது ...அன்பர்களே ஒரு வடமொழி ஸ்லோகம் இதற்கு வழி சொல்கிறது .

சிதைந்த சிவாலயங்களை சீர்திருத்துவது , பூசை புனஸ்காரங்களுக்கு வழி வகை செய்வது , அங்கு விளக்கேற்றுவது, திருப்பணிக்கு உதவுவது , போன்றவை அஸ்வமேத  யாகம் செய்வதற்கு ஒப்பாகும் 
என்கிறது அந்த வடமொழி ஸ்லோகம் .....
அன்பர்களே நம் தாய் தந்தைக்கு , நம் நெருங்கிய உறவினருக்கு சந்தர்ப்ப வசத்தால் கை , கால்கள் உடைந்தால் , உடல் உறுப்புகள் சேதமடைந்தால் நாம் அவர்களை ஒதுக்கி விடுவோமா ?

மருத்துவம் பார்க்க மாட்டோமா?அதிக கவனம் அல்லவா எடுத்து கொள்ளவேண்டும் ?
ஒரு திருக்கோயில் சிதிலமடைய துவங்குகிறது என்றால் பல ஆண்டுகளாக கவனிப்பின்றி உள்ளது என்று தானே அர்த்தம் ....நம்மால் புறக்கணிக்கப்படுகிற அத்தகைய திருக்கோயில்களை திருமேனிகளை புனரமைப்போர்க்கு குறைந்த பட்சம் நம்மால் இயன்ற உதவிகளையாவது செய்ய வேண்டாமா?

இம்மைக்கும் மறுமைக்கும் நம்முடைய சந்ததியினருக்கும் பல தலைமுறைகளுக்கு பிறகும் நன்மை பயக்க கூடிய அரிய செயல் இதை விட வேறென்ன உள்ளது ....?  

நம்மால் சேர்த்து வைக்கப்படுகிற சொத்துக்களை விட புண்ணிய காரியங்களே நம் தலைமுறையினரை வாழ்வாங்கு வாழவைக்கும் .....

அன்பர்களே கும்மிடிப்பூண்டி பொன்னி அம்மன் கோவில் அருகே உள்ள இந்த பெருமானுக்கு ஆவுடையார் மற்றும் நந்தியெம்பெருமான் செய்யப்படவேண்டியுள்ளது ......1 டி உயரம் கொண்ட நந்தி 5000 ரூபாயும் ஆவுடையார் சுமார் 10,000 முதல் 25000 வரையும் அளவிற்கு தகுந்தவாறு ஆகிறது ...

இம்மாதிரி பல தலங்களில் இவர்கள் சேவை செய்து வருகின்றனர் ......மேற்கூரை இன்றி இருக்கும் திருமேனிகளுக்கு மேற்கூரை அமைக்கும் பணியும் செய்து தருகின்றனர் ..

அலைபேசி எண் குறிப்பிட்டுள்ளேன் ....

சிவ கைங்கர்யம் செய்து அவனருளை அடைய போகிறவர் யார் ? என்பதை உங்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன் ...

அவன் அருள் பெற்றவர்கள் தானே அவன் திருப்பணிக்கு உதவ முடியும்?
உதவ நினைப்போர் கீழ்கண்ட அடியார் பெருமக்களை அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் .


அடியார் திரு ஜெயபாலன் அவர்கள்  6382588180
அடியார் திரு வெங்கடேசன் அவர்கள் 9444352848


Tuesday, June 5, 2018

குடும்ப மகிழ்ச்சி கூட்ட குமாரபுரி (பெரியபாளையம்) வாங்க ......

செண்பகாரண்ய ஷேத்திரம் எனப்படும் ஆரணி நதியோரம் அமைந்துள்ள 10 சிவாலயங்களில் முதன்மையானகாமாக்ஷி உடனுறை பர்வதீஸ்வரர் திருக்கோயில் கொசவன்பேட்டை ..
தற்போது கொசவன்பேட்டை என வழங்கப்படும் இத்தலம் பெரியபாளையம் அருகில் ஆரணி செல்லும் சாலையில் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ...

குமரன் பிரதானமாக கோயில் கொண்டுள்ளமையால் குமாரபுரி என்பதே மருவி கொசவன்பேட்டைஎன கூறப்படுவதாக கருத்து நிலவுகிறது .....

 மேற்கு நோக்கிய அற்புதமான திருக்கோயில் .திருப்பணி செய்யப்பட்டு புத்தம் புதிதாக விளங்குகிறது
மூலவர் சுமார் 5 அடி உயரத்தில் நீண்ட பாணம் கொண்டு தேஜோமயமாக அருட்காட்சி நல்குகிறார் பர்வதீஸ்வரர் .

அடடா என்ன அழகு...? என காண்போர் வியக்கும் அற்புத பேரழகோடு நீண்டு நெடிதுயர்ந்த, கைகளில் அங்குசம் பாசம் தாங்கி , அபயஹஸ்தங்களுடன் ,ஒரு காலை முன்னர் வைத்து பெண்களுக்குரிய நளினங்களுடன்6 அடி உயரத்தில் அன்னை காமாக்ஷி காட்சி தருகிறாள் ..வைத்த கண் வாங்காமல் அவளை உற்று நோக்குகிறோம் ..

அவள் அழகுக்கு அழகு சேர்ப்பதுபோல் அலங்கார ரூபிணியாக வெள்ளி கவசங்களுடன்  சிவாச்சாரியார் காங்கேயன் அவர்களின் கைவண்ணம் மெச்சத்தக்கது ...சுமார் 3 தலைமுறைகளாக இவர்கள் இத்திருக்கோயிலுக்கு சேவை புரிகிறார்கள் .....இவர் கிரஹம் கோயில் வளாகத்திலேயே உள்ளது ...
பலா மரம் தல விருட்சம் 


அம்பாள் வலப்புறம் அமர்ந்துள்ளதால் கல்யாண கோலம் கொண்டு தன்னை நாடி வரும் திருமணமாகாத அன்பர்களுக்கு திருமண வரம் நல்குகிறாள் ....

சிவாலயத்திற்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக நடைபெறுகிறது என்றாலும் திருவாதிரை நன்னாள் குறிப்பிட தகுந்தது .....அன்று காரைக்கால் மாங்கனி திருவிழாவை போலவே இங்கும் இறைவன் உலா வரும் போது அவர் மீது அன்பின் மிகுதியால் பழங்களை வீசி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர் .
அன்று ஊரே விழா கோலம் பூண்டிருக்கும் .....பெண்கள் வாசலில் கோலமிட்டு இறைவன் வருகைக்காக காத்திருப்பர்

இங்கு வந்து வழிபடுவோருக்கு திருமண தடை நீக்குவதோடு .....வாத வழக்குகளில் வெற்றி தம்பதியினரிடையே ஒற்றுமை மொத்தத்தில் இங்கு வந்து வழிபடுவோர் குடும்பத்தில் இன்னல்கள் நீங்கும் ....குறைவில்லா  மகிழ்ச்சி கூடும் ...
எனவே அன்பர்களே வாழ்வில் ஒருமுறையேனும் இத்திருக்கோயில் வந்து இறைவனையும் இறைவியையும் வணங்கி செல்லுங்கள் .....பின் அவர் பார்த்துக்கொள்வார் உங்களை .....

குருக்கள் அலைபேசி எண் :8124602646

ஆவடி ,  பெரியபாளையத்திலிருந்து பேருந்து வசதி நிறைய உள்ளது ..





Saturday, June 2, 2018

⧭ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டை .......
          ⧭அமைதியாய் அருளும் அரன்....... 


எப்போதும் பரபரப்பாய் இயங்கும்  ,ஆயிரக்கணக்கானோர் பணிபுரியும் அம்பத்தூர் தொழிற்பேட்டை 
ரயில்நிலையம் பட்டரவாக்கம்....

இங்கு இருக்கும் இடமே தெரியாமல் சிதைந்த நிலையில் கோயில் கொண்டுள்ளார் ஜகத் ஜனனி சமேத ஜெகதீஸ்வரர் .....

300 ஆண்டுகளுக்கும் முற்பட்டவர் .......3 ஆண்டுகளாக இவருக்கு திருக்கோயில் கட்ட முயன்று கடைக்கால் பணிகளோடு திருப்பணி நின்று  விட்டது.....

பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றாலும் தினசரி பக்தர்கள் வருகை என்பது அறவே இல்லை 
பிரதோஷத்தன்று மட்டும் மக்கள் கூடுவதாக சொல்கிறார்கள் ....

இப்பெருமான் கோயில் கொண்டதற்கான வரலாறு எதுவும் அறிந்துகொள்ள இயலவில்லை 


ஆவுடையார் பின்னப்பட்டுள்ளதால் ,பெருமானை தனியாக எடுத்து பாலாலயம் செய்துள்ளார்கள் ....

சிவாச்சாரியார் திரு முத்துக்குமரன் முகப்பேரிலிருந்து வந்து பூசை செய்து விட்டு செல்கிறார் 
அவர் அலைபேசி எண் 9444178149....

அருகில் பொன்னியம்மன் திருக்கோயில் நல்ல நிலையில் இயங்குகிறது ...பெருமாள் கோவில் ஒன்றும் இருப்பதாக கூறுகிறார்கள் ......

பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகில் இத்தலம் உள்ளது ......முதல் குறுக்கு பிரதான தெருவின் முடிவில்  அமைந்துள்ளது...

விசாரித்து செல்லலாம் ....

அஸ்பெஸ்டாஸ்  கூரையில் அருளும் இப்பெருமானை எப்போதும் தரிசனம் செய்யலாம் ..ஆனால் சற்று கூர்ந்து கவனித்தால் தான் கோயில் இருக்குமிடம் தெரிகிறது .....
கோயில் வளாகம் தொழிற்சாலை கழிவுகள் கொட்டும் இடமாக உள்ளது , வருத்தம் அளிப்பதாக உள்ளது 


அன்பர்களே ......ஜெகதீசனை தரிசனம் செய்யுங்கள் .....திருக்கோயில் நிலையை உலகறிய செய்யுங்கள் 
அரன் திருக்கோயில் முற்றுப்பெற உதவுங்கள்.......
சிவாச்சாரியார் திரு முத்துக்குமரன் 
  அலைபேசி எண் 9444178149....


Tuesday, May 29, 2018

உங்கள் கனவு இல்லம் நனவாக ......இங்கே வாங்க ...
அன்பர்களே .........

கட்டிய வீட்டை முடிக்க இயலாமல் வருந்துகிறீர்களா?
வாஸ்து குறைபாடுகளால் அல்லல் தொடர்கின்றனவா?
தேவ லோக சிற்பிகளான மயன் ,தேவ தச்சன் வணங்கி வழிபட்ட கொழுமணிவாக்கம் பாலீஸ்வர பெருமானை உளமார வணங்குங்கள் .....
சிறிய கோயிலிலே குடியிருந்து சிறப்பான பலன்களை வழங்க வல்லவர் பாலீஸ்வரர் ..
வாஸ்து குறைபாடுகளை நீக்கி அருள்பவர் ...

இத்திருக்கோயில் மாங்காடு அடுத்து குன்றத்தூர் செல்லும் சாலையில் கொழுமணிவாக்கம் பேருந்து 
நிறுத்தத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது .....

 இங்கு இரு சிவாலயங்கள் உள்ளன ....
முதலில் வருவது மேற்கு நோக்கிய அரிய  சிவக்கொழுந்தீவரர் திருக்கோயில்.....இவரை முதலில் 
வணங்கி பின் சற்று தூரம் நடந்தால் பாலீஸ்வரர் திருக்கோயிலை அடையலாம் .....

கருவறையில் மிக கம்பீரமாக காண்போர் மனதை கவரும் வண்ணம் இறைவன் பாலீஸ்வரர் 
அருள் புரிகிறார் ...தெற்கு நோக்கி அன்னை அருள்கிறாள் ....இவளும் பேரழுகு பொருந்தியவள் .
உங்கள் மனக்கவலை மாற்ற வல்லவள் .....
கோயில் பூட்டியிருந்தால் எதிரில் உள்ள அன்பர் கோவிலை திறந்து தரிசனம் செய்ய உதவுவார் .

ஆனால் அன்பர்களே என் ஆதங்கம் என்னவெனில் மாங்காடு வரும் திரளான பக்தர்கள் 
இத்தகைய அரிய பொக்கிஷங்களை தரிசிக்காமலேயே திரும்பிவிடுகின்றனர் ....

இந்நிலை மாறவேண்டும் ....
அனைவரும் சிவக்கொழுந்தீஸ்வரர் , பாலீஸ்வரர் திருவருளை பெற வேண்டும் ....

இதுவே என் விருப்பம் ......






Friday, May 25, 2018

அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில்
திருமயம் - 622 507, புதுக்கோட்டை மாவட்டம்

பல்லவர் காலத்தில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே சுற்றுச்சுவருடன் இக்கோயிலும், இதற்கு பக்கத்தில் உள்ள பெருமாள் கோயிலும் திருமயம் மலைச் சரிவில் ஒரே கல்லில் குடைவரைக் கோயில்களாக விளங்குகிறது. இந்த சத்தியகிரீஸ்வரர் ஆலயத்தை தனியே சுற்றி வரமுடியாது. மூலவர் சன்னதி குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது என்பது மிகவும் சிறப்பு.


மேலும் , வழக்கத்திற்கு மாறாக , இறைவன் சன்னதிக்கு பின்புறம் அமைந்திருக்கும் லிங்கோத்பவர் சன்னதி
இங்கு மூலவருக்கு நேர் எதிரே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது . மிக பிரம்மாண்டமான லிங்கோத்பவர் உலகிலேயே இங்கு மட்டுமே அமைந்துள்ளது . 
பல்லவர் காலத்தில் சைவமும் வைணவமும் தழைத்தோங்கியதற்கு எடுத்துக்காட்டாக இத்திருக்கோயில் விளங்கிகிறது .....
1300 ஆண்டுகளுக்கு முற்பட்டது இத்தலம் .....
சத்திய மகரிஷி தவம் புரிந்த தலம் ..
மதுரையை போன்று இறைவனும் இறைவியும் கிழக்கு திசை நோக்கி உள்ளனர் ...

இறைவி வேணுவனேஸ்வரி ....


ஒருகாலத்தில் வேணு (மூங்கில்)வனமாக இத்தலம் விளங்கியது .....


எனவே அன்னை வேணுவனேஸ்வரி என்ற பெயரில் வணங்கப்படுகிறாள் ....மழலை பாக்கியம் இன்றி வருந்துவோர் இங்கு வந்து அன்னைக்கு தொட்டில் கட்டி நேர்ந்து கொள்கின்றனர் .....அவ்வாறு செய்வதால் விரைவில் மழலை பாக்கியம் கிட்டுகிறது ....




Sunday, May 20, 2018

கலியுக துயரங்கள் தீர்க்கும் கருணாமூர்த்தி .....

திருவள்ளூர் மாவட்டம் இருளஞ்சேரி கிராமத்தில் அருள்புரியும் தாயினும் நல்லாள் சமேத கலிங்கநாதேஸ்வரர் திருக்கோயில் சுமார் 1200  ஆண்டுகள் பழமை வாய்ந்தது 
 கலியஞ்சிஸ்வரர் என்பதே மருவி கலிங்கநாதேஸ்வரர் என வழங்கப்படுகிறார் ..

தெரிந்தோ தெரியாமலோ இக்கலியுகத்தில் நாம் செய்கின்ற அனைத்து பாவங்கள் , அதனால் நாம் அனுபவிக்கும் 
துயரங்கள் , அச்சங்கள் நீக்கி அருள் புரிவதால் இப்பெயர் பெற்றார் பெருமான் .....

பெற்ற தாயினும் தயை புரியும் அன்னைக்கும் உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் தாயினும் நல்லாள் எனும் திருநாமம்.
இறைவன் பச்சை நிற கல்லினால் ஆனவர்.....பச்சை பசேல் என விளங்கும் வயல்களுக்கு நடுவில்சிறிய திருக்கோயில் ஒன்றில்  வீற்றிருக்கிறார் ..

எதிரே மிக பிரம்மாண்டமாக சங்கு தீர்த்தம் அமைந்துள்ளது ....கால வெள்ளத்தில் சிதைவுற்று குறுகியுள்ளது 
இத்திருக்குளத்தை மீட்டெடுக்க வேண்டியது நம் கடமை ....
தினம் ஒரு கால பூசை மட்டுமே நடைபெறும் இத்திருக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை மிகவும் குறைவு.
பிரதோஷ நேரத்தில் மட்டுமே கிராம மக்கள் வழிபட வருகின்றனர் ....

சிறந்த பரிகாரத்தலமான இத்திருக்கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளது ....
கல்வெட்டுகள் மூலம் இத்தகவல் நமக்கு தெரியவருகிறது 
மக்களால் அறியப்படாத மாபெரும் பொக்கிஷமான இத்திருக்கோயில் திருவள்ளூர் மாவட்டம் 
பேரம்பாக்கம் என்னும் இடத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் 
அமைந்துள்ளது ...பூந்தமல்லி யிலிருந்தும் , ரயில் மார்க்கமாக கடம்பத்தூரிலிருந்தும் வசதியாக சென்று வரலாம் .
இத்திருக்கோயிலுக்கு மிக அருகிலேயே தேவார பாடல் பெற்ற தீண்டா திருமேனியரான கூவம் திரிபுராந்தக ஈஸ்வரர் திருக்கோயில் .....புகழ் பெற்ற  நரசிங்கபுரம் நரசிம்மர் திருக்கோயில் மற்றும் நரம்பு 
சம்பந்த பட்ட நோய்கள் நீக்கும் பேரம்பாக்கம் சோழீஸ்வரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்கள் அமைந்துள்ளன 

திருக்கோயில் அர்ச்சகர் திரு கோபிநாத் 

அலைபேசி எண்: 7094936627
அன்பர்களே.....கலியுகத்தில் நாம் அனுபவிக்கும் துயர்கள் நீங்கி மன அமைதி பெற அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் இருளஞ்சேரி என்றால் அது மிகையல்ல .....

குறிப்பு:   அர்ச்சகரை அலைபேசியில் தொடர்பு கொண்டு பின் தரிசனம் செய்யலாம்.





Sunday, August 13, 2017

.⧭ சிவ கைங்கர்யம் ...பூர்வ ஜென்ம பாக்கியம் ....⧭

அருள்மிகு ஆரியகும்பகேஸ்வரர் திருக்கோவில். ஆரியம்பாக்கம்

வாலாஜாபாத்திலிருந்து ஸ்ரீ பெரும்புதூர் வழியில் சின்னசத்திரம் சென்று இவ்வூரை அடையலாம் .மிக பழமையான சிவாலயம் சிதைந்து சுவாமியும்மிக பெரிய நந்தி மூர்த்தமும் வானம்பார்த்து அருள்பாலிக்கின்றனர் .

சாய்ந்திருந்த சிவலிங்க திருமேனியை குங்கிலிய கலய நாயனாரை மனதில் நினைத்து இத்திருப்பணியை தொடங்கினார்கள் கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை யினர் .இத்திருபணியில் இக்கிராமமக்கள் திரளாக வந்து திருத்தொண்டு செய்தார்கள் .

.விரைவாக இங்கு திருக்கோவில் அமையவுள்ளது.அதற்கான முயற்சியை எடுத்து வருகிறார்கள் .அன்பர்கள் தங்களால் இயன்ற உதவியை பொருளாக மட்டும் தரலாம்.

சுவாமி திருவருளால் மேற்கூரைத்திருப்பணியும் , திருவேள்வியும் நடைபெற்றது .சிறப்பான வழிபாடு நடந்தேறியது இக்கிரமமக்கள் நந்தியம் பெருமானுக்கு அமைத்த மேற்கூரைக்கு Rs .15000 கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளனர் .

தொடர்புக்கு- திரு. சுமன் -9444163818.
-திரு.சுரேஷ்-7527015100




Tuesday, June 6, 2017

காசியினும் வீசம் அதிகம் 

மெய்யன்பர்களே , இறைவன் ருத்ரகோடீஸ்வரர் என்னும் பெயரை தாங்கிய திருகோயில்கள் மிகவும் குறைவு.
அதிலும் எதிரே மயான பூமியை பார்த்த வண்ணம் உள்ள திருகோயில்கள் மிக சிலவே(தற்போது இல்லை ). அத்தகைய திருகோயில்கள் சிறந்த பரிகார தலங்களாகும் .

கபில மகரிஷி , இறந்த தன் தந்தைக்கு காசியில் ஈம சடங்குகளை செய்ய எண்ணினார். அது சாத்தியமில்லாமல் போகவே இத்திருத்தலத்தில் அதனை நிறைவேற்றினார் . எனவே இத்தலம் காசியை விட வீசம் அதிகமாக
போற்றப்பட்டு வந்தது .
இறைவன் ருத்திரகோடீஸ்வரர், பேரழகு வாய்ந்த, மிக பருத்த திருமேனி உடையவர் .

பிதுர் நிவர்த்தி ஸ்தலமாக கருதப்படும் இத்தலம் திருவாரூர் பேருந்து நிலையத்திற்கு மிக அருகமையில்
மக்கள் அதிக அளவில் வசிக்கும் இடத்திலே தான் அமைந்துள்ளது .(காட்டு கார தெரு, சோழா திரையரங்கம் அருகில்)

ஆனால் கோவிலின் நிலை ???? கோமா நிலையில் இருக்கும் இத்திருகோயிலை மீட்டெடுப்பது நம் கையில் தான் உள்ளது .